எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராய்ப்பூர், ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது டெல்லி.
டெல்லி டேர்டெவில்சுக்கு எதிரான போட்டியில் டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடிய டெல்லி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வி கண்டு பிளே ஆப் வாய்ப்பையும் இழந்த டெல்லி, இப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சூப்பர் கிங்ஸை சந்தித்தது. ஆனால் தொடக்கம் முதல் டெல்லி பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தது. இதனால், சென்னை அணி அதிரடி தொடக்க வீரர்களான மெக்கல்லமும், ட்வைன் ஸ்மித்தும் ரன் அடிக்க சிரமப்பட்டனர். வழக்கத்துக்கு மாறாக அதிக பந்துகளை சாப்பிட்ட மெக்கல்லம் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்மித்தும் 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்.
எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவும், 11 ரன்களில் அவுட் ஆனார். அப்போது 9.2 ஓவர்களில் சென்னை 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்பிறகு டோணியுடன் ஜோடி சேர்ந்த ட்வைன் பிராவோ 8 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் டோணி, ரன் ரேட்டை உயர்த்துவதற்காக சற்று அதிரடி காண்பித்தார். ஆனால், 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த டோணி, ஜாகிர்கானின் அருமையான ஸ்லோ பந்தில், ஷபாஸ் நதீமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணியின் பவுலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினாலும், ஜாகீர்கானின் பந்து வீச்சு மிக அருமையாக இருந்தது. 4 ஓவர்கள் பந்து வீசிய ஜாகீர்கான் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்து வீச்சில் பழைய வேகம் மற்றும் துல்லியம் தென்பட்டது. இந்திய அணி சீருடையில் மீண்டும் ஜாகீர்கானை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை, அவர் உருவாக்கினார்.
இதையடுத்து பேட் செய்ய வந்த டெல்லியின் தொடக்க வீரர் டி காக் 3 ரன்களிலும், கேப்டன் டுமினி 6 ரன்களிலும் அவுட்டான நிலையில் சென்னை கை ஓங்கியது. ஆனால், தொடக்க வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும், யுவராஜ்சிங்கும் சென்னை கனவை தகர்த்தனர். யுவராஜ்சிங் 32 ரன்களிலும், ஆல்பி மோர்கல் 8 ரன்களிலும் அவுட்டான நிலையில், 16.2 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி வெற்றி இலக்கை எட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் 49 பந்துகளில் 70 ரன்களை குவித்தும், கேதர் ஜாதவ் 1 ரன்னிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெற்றிக்கு பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் டுமினி கூறியதாவது:
இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த 4 போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் மிகவும் சிற்பபாக செயல்பட்டோம். ஜாகீர்கானின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. வெற்றிக்கு அவரது பந்துவீச்சே முக்கிய காரணமாக இருந்தது. இளம் வீரர் ஷிரேஸ் அய்யர் திறமை மிக்க பேட்ஸ்மேன் ஆவார். அடுத்து ஐபிஎல் போட்டியில் நாங்கள் மிகுந்த பலம் பெற்ற அணியாக திகழ்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி குறித்து கேப்டன் டோணி கூறியதாவது:
பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் எங்களது தொடக்கம் மோசமாக இருந்தது. 6 ஓவரில் 20 ரன்களை கூட தொட முடியாமலே போனது. போதுமான ரன்களை எடுக்க இயலாமல் போனதால் தோல்வியை தழுவ நேரிட்டது. நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம். முதல் அல்லது 2-வது இடத்தை பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நாடு முழுவதும் டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயருகிறது
21 Dec 2025புதுடெல்லி, நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
உலகின் முதல் பெரும் பணக்காரர்: 700 பி. டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்
21 Dec 2025நியூயார்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: அரசியல் தலைவர் வீட்டுக்கு தீவைப்பு
21 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார்.



