எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இதுவரை நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் இமாலய வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27 ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தனது வேட்பாளராக சி.மகேந்திரனை களம் இறக்கியது. அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே ஆதரவளித்தது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்காமல் பின்வாங்கின. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. இடைத்தேர்தலில் 74.47 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்குப்பதிவு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவை பார்வையிடவும் கண்காணிக்கவும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளும் ஊழியர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நேற்று காலை 8 மணிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விக்ரம் கபூர். தேர்தல் பார்வையாளர் ஜோதி கலாஷ், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் ஆகியோர் முன்னிலையில் ஸ்ட்ரா்ங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட 420 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வாக்கு எண்ணும் இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 16 தபால் வாக்குகளும் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிச்சின்னமான இரட்டை இலைக்கே கிடைத்தது. அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. ஒவ்வொரு ரவுண்டு வாக்குகளும் எண்ணப்பட்டு, அதன் முடிவுகளை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜன் அறிவித்தார்.
17 ரவுண்டிலும் அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா மிக அதிகளவிலான வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் நூற்றுக்கணக்கான வாக்குகளே கிடைத்தன. இத்தேர்தலில் ஒட்டுமொத்த 2,40,543 வாக்குகளில் 181404 வாக்குகள் பதிவாகின. இதில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 160416 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனுக்கு 9710 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் ட்ராபிக் ராமசாமி உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
சுற்றுவாரியாக கிடைத்த ஒட்டு மொத்த வாக்குகள் விவரம் பின்வருமாறு:
1வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு : ஜெயலலிதா - 9546 வாக்குகள் - மகேந்திரன் - 930 வாக்குகள்
2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 20286 வாக்குகள் - மகேந்திரன் - 1637 வாக்குகள்
3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 30017 வாக்குகள் - மகேந்திரன் - 2287 வாக்குகள்
4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 38496 வாக்குகள் - மகேந்திரன் - 2799 வாக்குகள்
5வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா – 48,588 வாக்குகள் - மகேந்திரன் - 3653 வாக்குகள்
6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 57835 வாக்குகள் - மகேந்திரன் - 4287 வாக்குகள்
7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 67437 வாக்குகள் - மகேந்திரன் - 4816 வாக்குகள்
8வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 76842 வாக்குகள் - மகேந்திரன் - 5417 வாக்குகள்
9வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 86539வாக்குகள் - மகேந்திரன் - 5932 வாக்குகள்
10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 98503வாக்குகள் - மகேந்திரன் - 6269 வாக்குகள்
11வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 109166வாக்குகள் - மகேந்திரன் - 6731வாக்குகள்
12வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 118043 வாக்குகள் - மகேந்திரன் - 7215 வாக்குகள்
13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 126379 வாக்குகள் - மகேந்திரன் - 7785 வாக்குகள்
14வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 136232 வாக்குகள் - மகேந்திரன் - 8118 வாக்குகள்
15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 145965 வாக்குகள் - மகேந்திரன் - 8875 வாக்குகள்
16வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 155963 வாக்குகள் - மகேந்திரன் - 9420 வாக்குகள்
17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 160416 வாக்குகள் - மகேந்திரன் - 9710 வாக்குகள்
சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமிக்கு 4590 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. நோட்டாவுக்கு 2376 வாக்குகள் கிடைத்துள்ளது. கடைசியாக 17வது சுற்றுடன் வாக்கு எண்ணிக்கை 1-30 மணிக்கு முடிவடைந்து முதலமைச்சர் ஜெயலலிதா 1 லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்கு எண்ணிக்கை முகவர்களாக திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், முதல்வர் புரட்சித்தலைவி வாழ்க அம்மா வாழ்க என்று விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரியில் குழுமியிருந்த பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலையில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேலிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.பி. வெங்கடேஷ்பாபு , வடசென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.