முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதரசாக்கள் தாலிபான்களை உருவாக்குவதாக சிவசேனா குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 4 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

மும்பை - மகாராஷ்டிராவில் இயங்கிவரும் மதரசாக்கள் கல்வியை போதிக்காமல் தாலிபான்களை உருவாக்குவதாக சிவசேனா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சிவசேனா தனது பத்திரிகையில் சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், தற்போது செயல்படும் பெரும்பாலான மதரசாக்கள் முஸ்லிம் இனவாதத்தை பரப்பும் தொழிற்சாலையாகவே இயங்குகின்றன. இதன் மூலம் அங்கு படிப்பவர்கள் தாலிபான்களாகவே வெளியேறுகின்றனர்.

இஸ்லாமிய அறிஞர்களாக யாரும் அங்கிருந்து உருவாகவில்லை. பழைய இனவாத முஸ்லிம் சுமையை தூக்கி வீசிவிட்டு, நவீனமயமாக்கலில் மதரசாக்களை இறங்க வேண்டும். அவர்களது பள்ளிவாசல்களில் அறிவியல், கணக்கு ஆகியsவற்றை கற்பிக்கப்படுவதில்லை. போதனை செய்யும் பள்ளிகள் தரம் குறைந்த மத திணிப்பில் ஈடுபடக்கூடாது. அனைத்து பாடத் திட்டங்களையும் உள்ளடக்கினால் மட்டுமே சாதாரன முஸ்லிம் மக்களும் கல்வி அறிவு பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

உலக மக்கள் மேம்பட்டுக்கொண்டே போகும் போது, முஸ்லிம் மக்கள் மட்டும் அவர்களது மத நம்பிக்கையால் கல்வியறிவின்மையால் பின் தங்கி இருக்கக் கூடாது. அவர்கள் மத அடிப்படைத் தன்மையை கடந்து வர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டது. மதரசாக்களை நீக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டு வரும் நிலையில் சிவசேனா இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து