முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக இலங்கை தொடரிலிருந்து ஷிகர் தவண் விலகல்

திங்கட்கிழமை, 17 ஆகஸ்ட் 2015      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு: வலது கை எலும்பு முறிவு காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவண் இலங்கை தொடரிலிருந்து விலகியுள்ளார். காலேயில் இந்தியா தோல்வியடைந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் கேட்சைத் தவறவிட்ட ஷிகர் தவணின் வலது கையில் அடிபட்டது. இதனையடுத்து மருத்துவ சோதனை செய்யப்பட்ட போது வலது கையில் நூலிழையளவு எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்த்து.

இதனால் அவருக்கு 4 முதல் 6 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படுவதால் இலங்கைத் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.காலே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்த தவண், 2-வது இன்னிங்ஸில் 28 ரன்களை எடுத்தார். இதில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஷிகர் தவண் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்