முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த தம்பதியர் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் நிதி உதவி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னையில் மின்கம்பி அறுந்து வி்ழுந்ததில் உயிரிழந்த தம்பதியர் குடும்பத்திற்கு ரூ 8 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து முதல்வர் ஜெயலலிதாஅறிக்கை -

சென்னை, வேளச்சேரி வட்டம், அஷ்டலட்சுமி நகர், 5-வது தெருவில், 22.ம்தேதி மேல்நிலை மின்கம்பி மழை மற்றும் காற்றினால் திடீரென அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகர், 6-வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மழை மற்றும் காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி்யுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்