முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வான்வழி தாக்குதல்: ஐ.எஸ் தீவிரவாதிகள் 250 பேர் பலி?

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

பாக்தாத்  - ஈராக்கில் பலுஜா நகரில் அமெரிக்க படைகள் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தாக கூறப்படுகிறது.

தெற்கு பலூஜா நகரில் இருந்து தாக்குதல் நடத்த சென்றுக் கொண்டிருந்த ஐஎஸ் அமைப்பினர்  மீது அமெரிக்க படைகள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் பலியானவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை. இந்த தகவல் உண்மையெனில், தீவிரவாத அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் ஆகும். தாக்குதல் நடத்தப்பட்ட தகவலை ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்