முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,  வன்முறையால் கடந்த ஒன்றரை மாதமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள  காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஸ்ரீநகரில் ஆய்வு செய்தார்.

 காஷ்மீரில் உள்ள டிரால் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் . அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து அந்த பள்ளத்தாக்கு பகுதிகளில் பிரிவினை வாதிகள் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அரசு அலுவலகங்களை எரித்தல், அரசு பஸ்களை எரித்தல், கல் வீச்சு நடத்துதல் என பல்வேறு  அசாம்பாவிதங்களை ஏற்படுத்துகிறார்கள்.

இதனால் பாதுகாப்பு படையினருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் கடந்த 47 நாட்களில் 64 பேர் கொல்லப்பட்டனர். 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.

இந்த பதட்ட நிலை காரணமாக காஷ்மீரின் பல மாவட்டங்களில்,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மாநில தலைநகர் ஸ்ரீநகரில் சில இடங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில்  தொடர்ந்து பதட்ட நிலை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு அமைதியை ஏற்படுத்த மாநில எதிர்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்தார்கள். மேலும் அவர்கள் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார்கள்.  இந்த சந்திப்பை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஸ்ரீநகருக்கு நேற்று சென்றார். அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கு நிலவரம் குறித்து  அரசு அதிகாரிகள், ராணுவம், போலீஸ், துணை நிலை ராணுவம் அதிகாரிகளுடன் விவாதித்தார். அப்போது காஷ்மீரில் பதட்ட நிலைமை குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

காஷ்மீருக்கு புறப்படுவதற்கு முன்னர் ராஜ்நாத் சிங் டெல்லியில் கூறுகையில்,

ஸ்ரீநகரில் , நேரு விருந்தினர் விடுதியில் தங்கி பல்வேறு தரப்பு  மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் வார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்தார்.  ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா, கவர்னர் என்.என். வோரா ஆகியோருடனும் ஆலோசனை நடத்துகிறார்., கடந்த ஒன்றரை மாதத்தில் இரண்டாவது முறையாக ராஜ்நாத் சிங் தற்போது காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்