முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி ஆலயத் திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, வேளாங்கண்ணி ஆலயத் திருவிழாவையொட்டி சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வேளாண்கண்ணிக்கு சென்னை, பெங்களூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர் கோவில், திருவனந்தபுரம்  மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை கடந்த 25-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

திருவிழா முடியும் செப்டம்பர் 10-ம் தேதிவரை பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக முன்பதிவு வசதியும் செய்யப்படுகிறது. பயணிகள் விரும்பும் ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லவும் பின்னர் அங்கிருந்து பயணிகள் திரும்பவும் ஒரே நேரத்தில் முன்னதாக முன்பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தி் இந்த அரிய சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்