முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் கட்சிகள் தரும் பணத்தை வாங்கி கொள்ளுங்கள்: வாக்காளர்களுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  அரசியல் கட்சிகள் தரும் பணத்தை பஞ்சாப் மாநில வாக்காளர்கள் பெற்றுக்கொள்ளுமாறு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதே போன்ற கருத்தை கோவா பகுதியிலும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது  குறித்து அந்த மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.

வாக்கு யாருக்கு?
பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில்  பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின்  சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர்  நேற்று பஞ்சாப் ஜலந்தரில்  நடந்த கூட்டத்தில் பேசுகையில் , தேர்தல் நேரத்தில் பணம் தரும் கட்சிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள், ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் ., இப்படி செய்து பணம் அளித்த கட்சியை முட்டாளாக்குங்கள் என்றார்.

கோவாவில்
இந்த நிலையில் கோவா தலைமை தேர்தல் அதிகாரி  குணால் கூறுகையில், அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெறுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் இங்கு கூறிய தகவலும்  எங்களுக்கு வந்துள்ளது. இது குறித்து மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள்  அறிக்கை அனுப்புகிறோம்  என்றார்.
இருப்பினும் நேற்று வரை  கோவா தேர்தல் அதிகாரியின் அறிக்கை நேற்று முன்தினம் வரை அனுப்பப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்