முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சியில் எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சி ஜெ. தீபா பேரவை சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்.ரின் 100வது பிறந்தநாள் விழாவில் புரட்சிதலைவர் தலைவர் எம்.ஜி.ஆர்.  திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி 500பேருக்கு பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு அம்மூர் பேரூராட்சி முன்னாள் துணைதலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஜி.மணி, பி.தயாளன், பி.சண்முகம், ஆர்.மூகாம்பிகை ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் வி.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் வாலாஜா முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெ.தீபா பேரவை ஒருங்கினைப்பாளர் கே.துரை சிறப்பு அழைப்பாளர்ராக கலந்து கொண்டு அருள்மிகு பாப்பாத்தியம்மன் திருக்கோயில் இருந்து பஜார் வீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு அம்மூர் பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்ரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கேக் வெட்டி 500க்கு மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கினர். நகர இணைசெயலாளர் கற்பகம், மகளிர்அணி செயலாளர் பத்மாவதி, கருணாமூர்த்தி, சோளிங்கர் எம்.ஜி.ஆர்.இளைஞர்அணி செயலாளர் வேலம் கோபி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் ஆர்.சம்பத் எஸ்.தினேஷ் ஜெ.கேசவன், ஏ.சி.சண்முகம், மற்றும் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.கே.பாஸ்கரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்