முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர்,

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி; தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். மேலும் இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 239 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 76 மனுக்களும், சமூக நலத்திட்டம் 05 மனுக்களும், குடும்ப அட்டை 58 மனுக்களும், ஆதிதிராவிடர் ஃ பிற்படுத்தப்பட்டோர் நலம் 07 மனுவும், வேலைவாய்ப்பு 13 மனுக்களும், உரிமம் 04 மனுக்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு 09 மனுக்களும், ஊரக ஃ நகர்புற வளர்ச்சி 23 மனுக்களும், கடனுதவி 04 மனுக்களும், வேளாண்மை ஃ கால்நடைத்துறை ஃ மீன்வளம் 21 மனுக்களும், இதரதுறை 14 மனுக்களும், கல்வி 02 மனுக்களும், பேரிடர் 102 மனுக்களும், சான்றிதழ் 11 மனுக்களும், உழவர் பாதுகாப்புத்திட்டம் 01 மனுவும் என மொத்தம் 589 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும், பயனாளிகளுக்கு உதவிடும் வகையில் விரைந்து பரிசீலிக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பாக, 10 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் (ஒரு தையல் இயந்திரம் விலை ரூ.3,386ஃ-), மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக 18 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட  உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

                இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ட்டி.ஆர்.மல்லிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.ஷர்மிளி, மாவட்ட வழங்கல் அலுவலர் வ.சந்தியா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்