முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட வேண்டும் : முன்னாள் அதிபர் ஒபாமா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட வேண்டும் என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு தடை
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை போட்டுள்ளார்.

இடைக்கால தடை
அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சிரியா அகதிகள், அமெரிக்காவில் நுழைய முடியாது. அடுத்து, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவுக்கு  இடைக்கால தடை விதித்துள்ளன.

ஒபாமா வலுயுறுத்தல்
டொனால்டு டிரம்பின் உத்தரவு கடும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமா அமெரிக்க மக்கள் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தனது குடும்பத்தினருடன் விடுப்பில் சென்றுள்ள ஒபாமா தனது செய்தித்தொடர்பாளர் மூலம் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்