எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில். பாரத தேசத்தின் தென்திசையில் காவிரி பாய்ந்தோடும் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும் கண்ணனூர் என்னும் சமயபுரத்தில் வீற்றிருக்கும் ஆயிரம் கண்ணுடையாள் என்று அழைக்கப்படும் அருள்மிகு மாரியம்மன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறாள். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்து கருணை மழை பொழிந்து பூவின் மணமாகவும் பழத்தின் சுவையாகவும் கருணை கடலாகவும் யாவராலும் துதித்து தீராத நோய்களையும் தீவினைகளையும் தீர்த்து அருளும் கருணை உள்ள கொண்டு திகழ்ந்து வருகிறாள். தேவீ மஹாத்மியத்தில் 'சைவகாலே மஹா காளி மஹாமாரி ஸ்வரூபையா" என்று சொன்னவாறு பிரபஞ்சத்தை தோற்றுவித்து ரட்சித்து லயப்படுத்திக் கொண்டுள்ளாள். இந்த பராசக்தியே மாராசூரனை சம்ஹரிக்க மஹாமாரி வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி வேண்டுவோர்க்கு வேண்டிய வரும் தரும் சக்தி வாய்ந்த தளமாக உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிமல் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். சபரி மலை, பழனி, வேளாங்கன்னி, மேல்மருவத்தூர், திருப்பதி போன்ற ஆலயங்களுக்கு சுற்றுலா செல்வோர் இங்கும் வந்து செல்கின்றனர். மேலும் கருர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கிளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஞ்கள் உடையணிந்து மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வேப்பிலை கையிலேந்தி பாதயாத்திரையாக வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொறிதல் விழா, சித்திரை மாதம் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.
பங்குனி மாதம் பிறந்தவுடன் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பூச்சொறிதல் விழா நடைபெறும் அப்போது பல மாவட்டங்களில் இருந்தும் அம்மனை பூக்களால் அலங்கரித்து மேள தாளம், வாணவேடிக்கை, பாரம்பரிய தப்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டத்துடன் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வருவர். 5வாரம் பூச்சொறிதல் விழா முடிந்து சித்திரை பிறந்து முதல் செவ்வாய் கிழமை சித்திரை தேரோட்டம் நடப்பது வழக்கம். தேரோட்ட காலத்தில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து மேள தாளத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து இரவு கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், பெரம்பலூர், துறையூர், திருச்சி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்;துகள் இயக்கப்பட்டு வருகிறது. அம்மை போன்ற தீராத நோய்களால் பாதித்தவர்கள் இங்கு வந்து தங்கி சென்றால் பூரண குணமாகும் என்பது ஐதீகம். எனவே பலர் வந்து தங்கி செல்கின்றனர்.ம எனவே சமயபுரம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இப்படி சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. சம்பிராதாயப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிN~கம் நடத்தப்படவேண்டும். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. அரசு ஒதுக்கிய நிதி மற்றும் நன்கொடையாளர்கள் கொடுத்த நிதி உதவியுடன் பலகோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்த கோவில் வளாகம் தற்போது நன்கொடையாளர்களால் கிரயம் பெற்று ஒப்படைக்கப்பட்ட சுமார் 22 ஏக்கர் நில பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு அங்கு முடி மண்டபம், குளியல் வசதிகள் உள்பட பல்வேறு கட்டமைப்புகள் மிகவும் பிரமாண்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அங்கிருந்த பெருவளை வாய்க்காலையே அப்புறப்படுத்தி திருப்பி விடப்பட்டுள்ளது.
கோவிலின் கிழக்கு பகுதியில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள் ளன. கோவில் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், பாலாலயம் நடந்து 6 மாதங்கள் முடிந்து விட்டதாலும் பக்தர்களின் வழிபாட்டு நலன் கருதி கோவில் கும்பாபிசேகத்தை விரைவில் முடிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையின் விளைவாக வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கும்பாபிசேகம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே கிழக்கு வாசல் ராஜகோபுரம் தவிர மற்ற கோபுரங்கள், மூலஸ்தான விமானம மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வருகிற 6ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கும்பாபிN~கம் நடைபெறுகிறது.
இதற்காக யாகசாலை பூஜைகள் 3ஆம் தேதி தொடங்கியது. கும்பாபிசேகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு, அடிப்படை வசதிக்காக மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் படி சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக 4 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிசேக விழா ஏற்பாடுகளை இணைஆணையர் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.