எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் திம்மாம்பேட்டை கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் டாக்டர்.கா.ப.கார்த்திகேயன், முன்னிலை வகித்தார்.வாணியம்பாடி வட்டாட்சியர் முரளி வரவேற்புரையாற்றினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் பேசியதாவது:- மனுநீதி நாள் முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அத்தகவல்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டத்திலும் உள் வட்டாரங்களில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இக்குறை தீர்ப்பு கூட்டங்களில் அதிகமாக முதியோர் ஓய்வூதியம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் வேண்டி மனுக்கள் பெறப்படுகின்றன. இதில் தகுதியுடைய பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படுகிறது. இதே போல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மாதந்தோறும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. இவ்வளவு சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்தாலும் நம் மக்களிடையே இன்னும் அதிக குறைகள் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய மக்கள் தொகை அதிக அளவு இருப்பதே ஆகும். தற்போதுள்ள வறட்சியான நிலையில் மக்களின் முக்கியமான தேவை குடிநீர். உங்களுடைய பகுதியில் குடிநீர் போதுமான அளவு உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கேனும் குடிநீர் பிரச்சனை இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்றார்.. இவ்விழாவில் வருவாய்துறையின் மூலம் 114 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், சிறு குறு விவசாயி, வாரிசு, இருளர் சான்றிதழ்களையும், முதியோர் உதவித் தொகை போன்ற நிதியுதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு சலவை பெட்டியும், வேளாண் துறையின் சார்பாக 8 பயனாளிகளுக்கு விதைப்பைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபருக்கு உதவித் தொகையும், பல்வேறு விபத்துகளில் பாதிப்படைந்த 25 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையும், சமூக நலத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி, பசுமை வீடு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு இலவச வீடுகளும், இந்திய ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கடனுதவி தொகையும் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் மூலம் 81 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் ஆக மொத்தம் 246 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்தி 92 ஆயிரம் 100ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், இணை இயக்குநர் (கால்நடை) மரு.அர்த்தனாரி, துணை இயக்குநர் (கால்நடை) மரு.மனோகரன், இணை இயக்குநர் (வேளாண்மை) டேவிட்ராஜா, உதவி இயக்குநர் (வேளாண்மை) சோமு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சந்தியா மகேஸ்வரி, துணை இயக்குநர் (நோய் தடுப்புத் துறை) மரு.தேவபார்த்தசாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை நிஷாந்தினி, இணை இயக்குநர் (பட்டு வளர்ச்சித் துறை) சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.முரளிதரன், வெங்கடேசன், திம்மாம்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி, தொடக்க கல்வித் துறை அலுவலர் சித்ரா, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மதிவாணன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்க நகைகள் மீதான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
23 Dec 2025சென்னை, நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-12-2025.
23 Dec 2025 -
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக தேர்தலை எதிர்கொள்வோம்: பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
23 Dec 2025சென்னை, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்வோம் என்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
அமெரிக்கா: சிறிய ரக விமானம் கடலில் விழுந்ததில் 5 பேர் பலி
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான
-
இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்
23 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர்.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
23 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
சேலத்தில் டிச. 29-ம் தேதி நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம்
23 Dec 2025சென்னை, சேலத்தில் 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல.
-
உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள்: தேசிய விவசாயிகள் தினத்தில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
23 Dec 2025சென்னை, உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளஆர்.
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை நிறுத்தினேன்: டொனால்ட் ட்ரம்ப்
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
-
இ.பி.எஸ். உடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
23 Dec 2025கோவை, அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை என்றும் தொகுதி பங்கீடு
-
எப்ஸ்டீன் ஆவணங்களில் நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் படங்கள் மீண்டும் சேர்ப்பு
23 Dec 2025வாஷிங்டன், எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படங்களை அந்நாட்டு நீதித்துறை மீண்டும் சேர்த்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்தித்து பேச்சு: அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
23 Dec 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் சந்தித்து பேச
-
நெதர்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்: கூட்டத்தின் மீது கார் மோதி 9 பேர் காயம்
23 Dec 2025ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து: கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணுவகுப்பு காண கூடியிருந்தவர்கள் மீது மோதிய கார் ; 9 பேர் காயம்


