எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் திம்மாம்பேட்டை கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் டாக்டர்.கா.ப.கார்த்திகேயன், முன்னிலை வகித்தார்.வாணியம்பாடி வட்டாட்சியர் முரளி வரவேற்புரையாற்றினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் பேசியதாவது:- மனுநீதி நாள் முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அத்தகவல்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டத்திலும் உள் வட்டாரங்களில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டு அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இக்குறை தீர்ப்பு கூட்டங்களில் அதிகமாக முதியோர் ஓய்வூதியம் மற்றும் புதிய குடும்ப அட்டைகள் வேண்டி மனுக்கள் பெறப்படுகின்றன. இதில் தகுதியுடைய பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படுகிறது. இதே போல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் குறை தீர்ப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மாதந்தோறும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. இவ்வளவு சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்தாலும் நம் மக்களிடையே இன்னும் அதிக குறைகள் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய மக்கள் தொகை அதிக அளவு இருப்பதே ஆகும். தற்போதுள்ள வறட்சியான நிலையில் மக்களின் முக்கியமான தேவை குடிநீர். உங்களுடைய பகுதியில் குடிநீர் போதுமான அளவு உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக துறை சார்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கேனும் குடிநீர் பிரச்சனை இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்றார்.. இவ்விழாவில் வருவாய்துறையின் மூலம் 114 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், சிறு குறு விவசாயி, வாரிசு, இருளர் சான்றிதழ்களையும், முதியோர் உதவித் தொகை போன்ற நிதியுதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு சலவை பெட்டியும், வேளாண் துறையின் சார்பாக 8 பயனாளிகளுக்கு விதைப்பைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபருக்கு உதவித் தொகையும், பல்வேறு விபத்துகளில் பாதிப்படைந்த 25 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையும், சமூக நலத்துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி, பசுமை வீடு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு இலவச வீடுகளும், இந்திய ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கடனுதவி தொகையும் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் மூலம் 81 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் ஆக மொத்தம் 246 பயனாளிகளுக்கு ரூ.21 இலட்சத்தி 92 ஆயிரம் 100ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், இணை இயக்குநர் (கால்நடை) மரு.அர்த்தனாரி, துணை இயக்குநர் (கால்நடை) மரு.மனோகரன், இணை இயக்குநர் (வேளாண்மை) டேவிட்ராஜா, உதவி இயக்குநர் (வேளாண்மை) சோமு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சந்தியா மகேஸ்வரி, துணை இயக்குநர் (நோய் தடுப்புத் துறை) மரு.தேவபார்த்தசாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை நிஷாந்தினி, இணை இயக்குநர் (பட்டு வளர்ச்சித் துறை) சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.முரளிதரன், வெங்கடேசன், திம்மாம்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி, தொடக்க கல்வித் துறை அலுவலர் சித்ரா, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வாணியம்பாடி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மதிவாணன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.