முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.டி.வி. தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      விருதுநகர்
Image Unavailable

சென்னை. - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பாக டி.டி.வி. தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகின்றார். தொப்பி சின்னதிற்கு ஆதரவாக ஆர்.கே.நகர் சிவன் நகர் பகுதியில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று வீதி வீதியாக நடந்து சென்று தொப்பி சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு வாக்காளர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

ஆர்.கே.நகர் தொகுதியில் மாண்புமிகு அம்மாவிற்கு எந்த அளவிற்கு ஆதரவு இருந்ததோ அதே அளவிற்கு டி.டி.வி.தினகரன் அவர்களுக்கும் வாக்காளர்கள்  ஆதரவாக உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதியாகி விட்டது. எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையில் தொப்பி சின்னத்தில் போட்டுயிடும் டி.டி.வி.தினகரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. தொப்பி சின்னத்திற்கு வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. எம்ஜிஆர் ஆன்மாவும், புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மாவும் நிச்சியம் தொப்பி சின்னத்தை நிச்சயம் வெற்றிபெற செய்ய வைக்கும். ஆர்.கே.நகர் வெற்றி மூலம் இரட்டை இலை சின்னம் மீட்கப்படுவது நிச்சயம். மாண்புமிகு அம்மா அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி, ஐடிஜ, சுற்றுச்சாலைகள், தார்சாலைகள் உட்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் இந்த தொகுதி மக்கள் பாதிக்கப்பட்ட போது மாண்புமிகு அம்மா அவர்கள் ஓடி வந்து தேவையான உதவிகளை செய்தார். அதே போன்று மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை இந்த தொகுதி மக்களுக்காக அம்மா அவர்களின் போர்ப்படை தளபதியாக திகழும் டி.டி.வி தினகரன் அவர்கள் கொண்டு வருவார். அம்மா அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் டி.டி.வி.தினகரன் அவர்கள் செய்து முடிப்பார். அம்மா அவர்கள் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் வாக்காளர்கள் தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

எதிரிகளுடனும் துரோகிகளுடனும் மோத வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இன்று இந்த இயக்கத்தின் மீது சிலர் புழுதிவாரி இறைத்து வருகின்றனர். கன்னியப்பன் என்றவர் தற்கொலை செய்து கொண்டதை வைத்து திமுக இன்று அரசியல் நடத்தி வருகின்றது. அவர் சாவுக்கு நாங்கள்தான் காரணம் என்ற கர்பனை செய்தியை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அவர் உடல்நலம் குன்றி ஒரு ஆண்டுகள் சிகிச்சை பெற்ற விபரம் எங்களிடம் உள்ளது. அவர் இறந்தது எங்களுக்கு வருத்தம்தான். அதற்காக அவரின் இயற்கையான சாவை வைத்து திமுகவினர் அரசியல்  செய்யக்கூடாது. அவர்களின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் வாக்காளர்கள் தொப்பி சின்னத்தில் வாக்களித்து டி.டி.வி தினகரன் அவர்களை மாபெறும் வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும் என்று பேசினார். பிரச்சாரத்தில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், ஒன்றிய செயலாளர்கள் சாத்தூர் சண்முகக்கனி, சிவகாசி புதுப்பட்டி கருப்பசாமி, ராஜபாளையம் வேல்முருகன், குருசாமி, நகர செயலாளர்கள் ராஜபாளையம் பாஸ்கரன், திருவில்லிபுத்தூர் முத்துராஜ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா, விருதுநகர் இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் மச்சராஜா, நரிக்குடி பிரபாத்,  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர்ராஜ், சாமிவேல், ஆர்.கே.நகர் வட்ட செயலாளர்கள் புருஷோத்மன், ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்