முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்தனூர் மற்றும் மல்லசமுத்திரம் பேரூராட்சிகளில் ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 30 மே 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்டம், அத்தனூர் மற்றும் மல்லசமுத்திரம் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (30.05.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

அத்தனூர் பேரூராட்சி, உடுப்பத்தான்புதூரில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் ரூ.92.92 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் தரம் பிரித்து இயற்கை உரம் உற்பத்தி செய்வதற்கான கட்டுமானப்பணி உள்ளிட்ட அத்தனூர் பேரூராட்சியில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளையும், மல்லசமுத்திரம் பேரூராட்சி, காளிப்பட்டி புதுப்பாவடியில் புதிய அங்கன்வாடி கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக்கட்டிடத்தினையும், இதே பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.8,000 மானிய நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிப்பிடம் கட்டிடத்தினையும், போயர் தெருவில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தொல்காப்பியன் என்பவரின் மனைவி தமிழ்செல்வி மற்றும் ராமபோயர் என்பவரின் மகன் ஆர்.சுப்பிரமணி ஆகியோர் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி வரும் பணியினையும், கோணாங்கிபாளையத்தில் புதிய அங்கன்வாடி கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக்கட்டிடத்தினையும், வார்டு எண்-15-க்குட்பட்ட கருப்பண்ணர் கோவில் அருகில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் தரம் பிரித்து இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணி உட்பட மல்லசமுத்திரம் ஆகிய பேரூராட்சியில் ரூ.3.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் என மொத்தம் அத்தனூர் மற்றும் மல்லசமுத்திரம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் தரமாகவும், குறிப்பட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட கோணங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் வறட்சியினை முன்னிட்டு பள்ளிக்குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களிலும் முட்டையுடன் கூடிய சத்துணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுக்கு தரமான உணவுகளை சமைத்து தொடர்ந்து வழங்கிட வேண்டுமென சத்துணவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.ஜெகதீஸ்வரி, உதவிப்பொறியாளர் சி.அம்சா, அத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.கீதா, மல்லசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் கோ.சதீஸ் உட்பட பேரூராட்சி துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து