எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பதைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும், ஊரக வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமை ஒழிப்பிற்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது.
இந்தியாவில் வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்புத் தொழில் விளங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தைகளுக்கு பால் தரும் “செவிலித் தாய்” என்று அழைக்கப்படுகிறது. வெள்ளாடு வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும். பசு, எருமைகள் வளர்க்க முடியாதவர்கள் கூட வெள்ளாடுகள் வளர்த்து வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகப்படுத்தலாம். ஆடுகளைச் சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், மலைச்சரிவுகளிலும் மேயவிட்டு வளர்க்கலாம்.
இதற்காக அதிக இடமோ, அதிக செலவோ தேவையில்லை. எல்லா வகையான புல், பூண்டுகளையும், இலைதழைகளையும், முலிகை கலந்த செடிகொடிகளையும் மற்ற கால்நடைகள் உண்ணாத பொருட்களைக் கூட உண்டு உயிர் வாழ கூடியவை. வெள்ளாடுகள் நம் நாட்டில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கும் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நிரந்தர வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக விளங்குவதால் வெள்ளாடுகள் ஏழைகளின் நடமாடும் வங்கியாகக் கருதப்படுகிறன.
வெள்ளாட்டின் நன்மைகள்
• குறைவான முதலீடு, குறைந்த செலவில் தீவனம் கொடுத்து வளர்க்கவல்லது
• அதிக உற்பத்தி மற்றும் ஈனும் திறன், அதிக தீவன மாற்றுத்திறன் கொண்டவை.
• இறைச்சி அனைத்து தரப்பினராலும் உண்ணக்கூடியது
• கறிக்காகவும், பாலுக்காகவும், தோலுக்காகவும், உரத்திற்காகவும் வளர்க்கலாம்.
• அதிகமான அளவில் குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. ஒரு ஈற்றில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்
• இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகளை ஈனும்
• வெள்ளாட்டு பால் சளி மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் மருத்துவ தன்மை கொண்டது.
வெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்தல்
இனங்களைத் தேர்வு செய்யும் போது எந்த முறையில் வெள்ளாடு வளர்ப்பு செய்கிறோம் என்பதனை கருத்தில் கொண்டு பண்ணை ஆரம்பிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் இனங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அதிக பால் கொடுக்கும் இனங்கள்; : ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், தலைச்சேரி
அதிக இறைச்சி தரக்கூடியவை : ஜமுனாபாரி, போயர், சிரோகி
அதிக குட்டிகள் ஈனக்கூடியவை : தலைச்சேரி, பார்பாரி
தமிழ்நாட்டில் கொட்டில் முறை வளர்ப்பில் இறைச்சி உற்பத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பண்ணைக்கு போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, சிரோகி ஆகிய இனங்கள் ஏற்றவை.
இனப்பெருக்க பராமரிப்பு
வெள்ளாடு வளர்ப்பில் இனப்பெருக்க பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் நல்லதோர் இனச் சேர்க்கைக் கொள்கையைக் கடைப்பிடித்தல் அவசியம். ஏனெனில் அப்போதுதான் தரமான குட்டிகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட முடியும்.
வெள்ளாடுகளின் பெட்டை ஆடுகள் 6-8 மாதத்திலும், கிடாக்கள் 8-10 மாதத்திலும் பருவம் அடையும். ஆனால் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தகுதியைப் பெட்டையாடுகள் 12-15 மாதத்திலும், கிடாக்கள் 18 மாதத்திலும் அடைகின்றன. பொதுவாக வெள்ளாடுகள் மே, ஜனவரி மாதங்களில் சினை தருணத்திற்கு வரும். எனினும் ஆண்டின் எத்தருணத்திலும் இனவிருத்தியாவதுண்டு. பெட்டையாடுகள் 19-21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவத்திற்கு வருகின்றன.
சினைப்பருவம் 24-28 மணி நேரம் நீடித்திருக்கும். பெட்டைகளைச் சினைப்பருவ அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் நல்ல தரமான கிடாவுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்காக சுமார் 20 முதல் 30 ஆடுகளுக்கு ஒரு பொலிகிடா போதுமானது. பெரிய மந்தையாக இருப்பின் இதே விகிதத்தில் அதிக கிடாக்கள் தேவைப்படும். இனச்சேர்க்கை செய்த 21 நாட்களுக்கு பிறகு பெட்டைகளில் சினைப்பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு பருவத்திற்கு வரும் சினைப்பிடிக்காத ஆடுகளை மீண்டும் கிடாவுடன் சேர்த்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
சினைப்பருவ அறிகுறிகள்
• சினைப்பருத்திலுள்ள ஆடுகள் அடிக்கடி கத்திக் கொண்டு நிதானமின்றியும், வாலை ஆட்டிக் கொண்டும், தீவனத்தில் விருப்பம் இல்லாமலும் காணப்படும்.
• மற்ற ஆடுகள் மேல் தாவும், பிற ஆடுகளைத் தம் மேல் தாவ அனுமதிக்கும்.
• பால் உற்பத்தி அளவு குறையும்
• இனப்பெருக்க பிறப்புறுப்புத் தடித்துக் காணப்படும். அதிலிருந்து வழவழப்பான திரவம் வெளிப்படும்.
• வெள்ளாடுகள் சினைத் தருணத்தை மிகுந்த வெளிப்படையாகக் காட்டாது. எனவே, பொலி கிடாவைக் காலை, மாலை அருகில் விட்டு சினைத் தருணத்தை அறிந்து, தக்கபடி இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆடுகளின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்களாகும். சினையுற்ற ஆடுகள் கருவூட்டல் செய்த இரண்டு மாதத்தில் வயிறு பெரிதாக காணப்படும். காலை நேரங்களில் சினை ஆடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம். ஏனெனில் காலை நேரத்தில் வெறும் வயிராக இருக்கும் பொழுது சினையில்லா ஆடுகள் வயிறு ஒட்டியும், சினையான ஆடுகளின் வயிறு பெரிதாகவும் காணப்படும். அதோடு வயிற்றின் கீழ்ப்பகுதியின் ஒரு புறத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுபுறம் இருந்து மறு கையின் உதவியால் மென்மையாக அழுத்திப் பார்ப்பதன் மூலம் குட்டியின் இருப்புத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
குட்டி ஈனுதல்
குட்டி ஈனும் தருணத்தில் ஆடு அமைதியுற்று கத்திக் கொண்டிருப்பதுடன் வயிறு சுருங்கி விரிதல், அடிக்கடி உட்கார்ந்து எழுதல், மூச்சுத் திணறல், தரையை காலால் பிராண்டுதல் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்தில் குட்டியை ஈன்றுவிடும். ஈனும் குட்டியானது முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, தலையை காலின் மேல் வைத்த வண்ணம் வெளியில் வரும். இரண்டு குட்டிகளை ஈனும் நேரமானது சற்றே வேறுபடும். அதாவது முதலாவது குட்டிக்கும், இரண்டாவது குட்டிக்கும் இடையே உள்ள ஈனும் நேரமானது சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் ஆகலாம். மேலும், தாமதம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.
குட்டி ஈன்றபின் நஞ்சுக் கொடியானது 30 நிமிடம் முதல் 8 மணி நேரத்திற்குள்ளாக வெளித்தள்ளப்பட்டுவிடும். குட்டி ஈன்ற ஆடுகளுக்கு சரியான முறையில் அடர் தீவனமும், பசுந்தீவனமும் கொடுப்பதன் மூலம் அதன் கருப்பை சுருங்கி 45 நாட்களில் மீண்டும் பருவ சுழற்சி ஏற்படும். இல்லையெனில் 7 முதல் 9 மாதங்களுக்கு பின்பே பருவச் சுழற்சி ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.