எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பொங்கிய இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாற ஒரு கட்டத்தில் தலைமைச் செயலகம், சுப்ரீம்கோர்ட், முன்னாள் பிரதமர்களின் இல்லத்தை சூறையாடினர்.
போலீஸ் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் 51 பேர் உயிரிழக்க, பிரதமர் ஒலி சர்மா, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பதவி விலகினர். பின்னர் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற, இடைக்கால பிரதமராக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி, தேர்வு செய்யப்பட்டு, பதவியும் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக தொடர்வார்.
இந் நிலையில், காத்மாண்டுவில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ராணுவம் நேற்று (செப்.13) அதிகாலை 5 மணி முதல் விலக்கி உள்ளது. ஆனாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி இருக்கிறது. சாலைகளில் வாகன போக்குவரத்து காணப்படுகிறது. சந்தைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
நேபாளத்திற்கு 2026ம் ஆண்டு மார்ச் 5ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று இடைக்கால அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றவுடன், நேபாள நாட்டுக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவத்சவா சந்தித்து பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


