எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் எதிர்பார்ப்பது போல எதுவும் கிடைக்காது என்றும், 4 ஆண்டுகளை பூர்த்தி செய்வோம் என்றும் நேற்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பதிலடி அளித்தார்.
தி.மு.க. வெளிநடப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த பிரச்சனையை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் நேற்று முன்வைத்தார். அதை தகவல்கோரல் அடிப்படையில் எடுத்து கொள்வதாக சபாநாயகர் தனபால், அறிவித்தார். ஆனால் ஸ்டாலின் விரிவாக பேச அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து சபையில் பெரும் கூச்சல் குழப்பம் எழுப்பியபடி தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.
வழக்கு விசாரணையில் ....
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-
எம்.பி.வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர், இந்திய தேர்தல் ஆணையத்திடம்தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005-ன் கீழ், தன்னுடைய மனுவில், ஆர்.கே.நகரில்நடைபெற்ற இடைத்தேர்தல் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டுள்ளார். அதைப்பற்றித் தான் இங்கே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராமசாமியும் பிரச்சனையை எழுப்பியிருக்கின்றார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், வருமான வரித்துறை சோதனையின்போது, ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற பொழுது, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட ஏதுவாக புகார் மனு அளித்திட அறிவித்திருந்தது. அதன் தொடர்பாக, பெருநகர் குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராமசாமிக்கும் அவையில் இருக்கின்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க மீது 48 வழக்குகள்
அண்மையில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் இடைத்தேர்தலின் போது, தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 வழக்குகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நான் பதில்சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பேட்டி கொடுத்ததாக சொல்லியிருக்கிறார்கள். ஆக, அதைப்பற்றி நான் கேட்டு இப்பொழுது பதில் அளித்திருக்கிறேன், அந்த விவரத்தைத் தான் கொடுத்திருக்கின்றேனே யொழிய, நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பதில் வரவில்லை, இன்றைக்கு (நேற்று) பதில் வந்திருக்கிறது. இந்த பதிலை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றேன் என்பதை தாங்கள் வாயிலாக அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
4 ஆண்டு காலம் ....
இவர்கள் தினந்தோறும் சட்டமன்றத்திற்கு வருவதும், ஏதாவது ஒரு பிரச்சினையை எழுப்புவதும், அதில் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக எதுவுமே கிடைக்காது. அம்மாவினுடைய அரசு 4 ஆண்டு காலம் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.