முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மர்ம மனிதர்கள் சுட்டதில் 2 கடற்படை வீரர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 20 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரத்தில் மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் திங்கட்கிழமையன்று ஜிவானி பகுதியின் தென்மேற்கு கடற்கரை ஓரத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''கடற்படை வாகனத்தின் மீது மர்ம மனிதர்கள் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். கண்மூடித் திறப்பதற்குள்ளாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்'' என்றனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தான் மாகாணம் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லையாக அமைந்துள்ளது. இதனால் பிரிவினைவாதிகளும், ஐஎஸ் தீவிரவாதிகளும் இப்பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து