முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாளைக்கு 8 தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர உங்களுக்கு சிறுநீர்ப்பை கோளாறு இருக்க வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      மருத்துவ பூமி
Image Unavailable

Source: provided

மதுரை மருத்துவமனைகளில் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு வாரம் வரும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக வரக் கூடிய பல்வேறு பிரச்னைகளில் சிறுநீர்ப்பை கோளாறும் ஒன்று. பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் ஆறில் ஒருவர் சிறுநீர்ப்பை கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தப் பாதிப்பால், சிறுநீர்ப்பை நிரம்பி, உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சில சமயம், வயதானோருக்கு தெரியாமலேயே சிறுநீர் வெளியேறிவிடும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பிவிட்டதாக, மூளைக்கு தவறான தகவல்களை சிறுநீர்ப்பையில் உள்ள நரம்பு செல்கள் அனுப்புவதால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது மூலமாக முழுமையாக இந்தக் கோளாறை முழுமையாகக் குணமடையச் செய்ய முடியும். இந்தப் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மருத்துவமனைகளில் ஜூன் 19-ம் தேதி முதல் ஒரு வாரம் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு அனுசரிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மருத்துவர் ஆ.எம். சதீஷ்குமார் கூறுகையில், சிறுநீர்ப்பை கோளாறு காரணமாக உடனே சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு வயதானவர்களிடம் ஏற்படும். சில சமயம் அவர்கள் கழிவறைக்கு செல்வதற்குள், சிறுநீர் வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு 8 தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், உங்களுக்கு சிறுநீர்ப்பை கோளாறு இருக்க வாய்ப்பு இருக்கிறது. வயது முதிர்வு காரணமாக வரக் கூட இந்தப் பிரச்சனையை சமுதாயம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. குழந்தைகளை போல வயதானோரும் அவர்களுக்கு தெரியாமலேயே சிறுநீர் கழிக்கின்றனர் என்பதை சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுநீர்ப்பை கோளாறு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது, என்றார்.

இதுகுறித்து மேலும் மதுரையில் உள்ள திண்டுக்கல் கிட்னி சென்டர் மருத்துவர் ஆர்.நாகராஜன் கூறுகையில், சிறுநீர்ப்பை கோளாறால் பாதிக்கப்பட்டோர், இதுகுறித்து மருத்துவர்களிடம் தெரிவிக்க  வெட்கப்படுகின்றனர். உடலரீதியான பல பிரச்னைகள் போல, இதுவும் ஒரு பிரச்னைதான். முதலில், சிறுநீர்ப்பை கோளாறால் பாதிக்கப்பட்டோர், அதுகுறித்து மருத்துவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். உணவு முறையில் மாற்றம், தகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றின் மூலமாக சிறுநீர்ப்பை கோளாறு பிரச்னைக்கு தீர்வு காண முடியும், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து