முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தலைவர் தேர்தல் நாளன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குடியரசு தலைவர் தேர்தல் நாளான ஜூலை 17-ம் தேதி கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு அவை எம்.பி.க்களும் தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்காக பாராளுமன்ற தலைமைச் செயலக அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து எம்.பி.க்களும் டெல்லி வர உள்ளதால் அதே சமயத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.

பதவியேற்பு விழா

அதில் ஜூலை 17-ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் எம்.பி.க்கள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து விட்டு சபை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை நடைபெறும். ஜனாதிபதி தேர்தல் முடிவு மற்றும் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா அனைத்தும் இந்த கால கட்டத்தில் நடைபெறும். மேலும், கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த எம்.பிக்கள் வினோத் கண்ணா, பல்லவி ரெட்டி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

அனல் பறக்கும்

எனவே பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆளும் கட்சியினருக்கு மிகவும் கோலாகலமாக இருக்கும். என்றாலும் இந்த கூட்டத்தொடரில் மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பிரச்சனையை கிளப்பும் என்பதால் மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து