எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் அவரது நினைவு மண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்திலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை கழக அரசுதான் கொண்டாடும் என்று உறுதியுடன் சொன்னார். அவர் சொன்ன அந்த தெய்வ வாக்கு பலித்து, இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க அரசுதான் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அண்ணா நினைவிட வளாகத்திற்குள் உள்ள 3 ஏக்கர் பரப்பிலான இடத்தினை மேம்படுத்தி, சென்னை மாநகராட்சி மூலம் இயற்கை எழில்கொஞ்சும் பூங்கா ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபம் ஆகியவற்றிற்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா காணும் நிலையில் உள்ளன.
முத்தாய்ப்பாக ஒருபுறத்தில் வங்கக் கடல் அலை வந்து வந்து தாலாட்ட, மறுபுறத்தில் மக்கள் கடல் அலையாய் வந்து வந்து கண்ணீர் வடிக்க, மக்கள் திரள் தினந்தோறும் வந்து வந்து வழிபட்டு மகிழும் ஒரு புனிதத்தலம் சென்னையில் உள்ளது. அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த கீர்த்தியாகி அல்லலுறும் ஏழைகளே இல்லையெனும் நிலைமைதனை ஆக்கிய மூர்த்தியாகி தங்குதடை ஏதுமின்றி தமிழகம் முன்னேறதான் தேய்ந்து புனிதமாகி தரணியெங்கும் புகழுடலால் தான் நிறைந்துவான் கலந்த வரலாறாய் மாறிவிட்ட அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் தான் அது.
சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பீட்டில், நினைவு மண்டபம் அமைக்க செய்தி மக்கள் தொடர்புத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு, தொடர் நடவடிக்கையாக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,கோயம்புத்தூர் மாவட்டம், கொண்டையம் பாளையம் கிராமத்தில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க இத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் இத்துறையில் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்கள் குறித்து தமிழக மக்கள் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரும் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் 360 டிகிரியில் படம் எடுக்கப்பட்டு அதனை செய்தி மக்கள் தொடர்புத்துறை இணையதளம் மற்றும் கூகுள் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2017 முதல் ஜனவரி 2018 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார் என்பதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு அங்கீகாரத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த பட்டயப் படிப்புகள் இளங்கலை காட்சிக்கலை நான்காண்டு பட்டப்படிப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆறுபட்டப் படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன.
இதுவரை, செய்தி-மக்கள் தொடர்புத் துறையால் 183 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் அரசுக்கு, ஏறத்தாழ 37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிகர வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.