முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வாலிபர் ரயில்மோதி பலி

வியாழக்கிழமை, 14 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஓடைப்பட்டி கிராமம், கொங்கபட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன்; காளிமுத்து (வயது 22). இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் பழனி - மதுரை செல்லும் பயணிகள் ரயில் ஒட்டன்சத்திரம் புகைவண்டி நிலையம் அருகில் உள்ள சிக்னல் அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் காளிமுத்து கடக்க முயன்றார். அப்போது பயணிகள் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இவரது இருசக்கர வாகனம் சுமார் 200 மீட்டர் வரை ரயிலில் இழுத்து சென்றது. இது சம்மந்தமாக பழனி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளதால் அடிக்கடி விவசாயிகள் சென்று வருவதால் இப்பகுதியில் கேட் அமைக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து