முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலதிபர் கொடுத்த புகார் எதிரொலி : தாவூத் இப்ராஹிமின் சகோதரர் கைது

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இக்பால் கஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை குற்றப்பிரிவு போலீஸார் இக்பால் கஸ்கரை திங்கட்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தரப்பில், "மும்பை தானேவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெந்தி பஜார் பகுதியில் வசித்த இக்பால் கஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண விவகராத்தில் அக்மால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில் இக்பால் குற்றம் செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே அவரை கைது செய்தோம்” என்றனர். இந்த வழக்கு தொடர்பாக இன்னும் பலர் கைது செய்ய்யப்படவுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து