முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க வேண்டும் - மத்திய அரசிடம் அமைச்சர் தங்கமணி கோரிக்கை

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு மின் உற்பத்திமேற்கொள்ள தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க வேண்டும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய ரயில் மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியுஷ் கோயலை மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ் நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், முதன்மைச் செயலர் எம்.சாய்குமார் ஆகியோர் சந்தித்தனர். இதன் பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில்., தமிழ்நாடுமின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ள தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதால் தமிழகத்திற்கு தினமும் முழுமையாக நிலக்கரி வழங்கவேண்டும் என்றும், மேற்கண்ட நிலக்கரிகளை ரயில் மூலம் ஏற்றிசெல்வதற்கு தினமும் 20 ரயில்வே பெட்டிகள் ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் ரயில் மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இதைத் தொடர்ந்து டில்லியில் மத்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) ஆர்.கே.சிங், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முதன்மைச் செயலர் எம்.சாய்குமார், ஆகியோர் சந்தித்தனர்.

பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவிக்கையில்., தமிழ் நாட்டில் உள்ள செய்யூர் அனல் மின் உற்பத்தி நிலைய திட்டப்பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும், கூடங்குளம் 3,4 அனுஉலை மின்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு முழுமையாக 2000 மெகாவாட் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ் நாட்டில் அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக பிரத்யேக பசுமை வழித்தடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்கு ஏதுவாக பவர் கீரிடு மூலம் 765 கே.வி. மின் தொடர்கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்து உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு 17ஆயிரம் கோடி மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து