திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எல்லா சீசன்களிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று ஆரஞ்சு. ஆரஞ்சுப்பழத்திற்கு மற்றொரு பெயர் கமலா பழம். இதன் நிறம் சிவப்பு, மஞ்சள் கலந்ததாக இருக்கும். ஆரஞ்சுப்பழத்தில் சிலவகை நல்ல இனிப்பாகவும், சிலவகை இனிப்பும் புளிப்பும் கலந்ததாகவும், சிலவகை வெறும் புளிப்பு சுவையுடன் இருக்கும். பல நோய்களை முன் கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும், அனைத்து வயதினரும் தைரியமாகச் சாப்பிடக் கூடியதும், உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு சீராக்கும் ஆற்றல் உடைய பழம் ஆரஞ்சு.
ஆரஞ்சுப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இதில் வைட்டமின் ஏ, பி1, பி2, மற்றும் சி போன்ற உயிர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஆரஞ்சுப்பழச்சாறு இரத்தத்தில் பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கும். உடல் பலகீனமாக உள்ளவர்கள் தொடர்ந்து ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும், உடல் பலம் பெறும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, இளமைத் தோற்றத்தை உருவாக்கும். மலச்சிக்கலை நீக்கும், நன்கு ஜீரணமாகும், கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். இரவு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், ஆரஞ்சுப்பழச்சாற்றை அரை டம்ளர் அளவு எடுத்து, அத்துடன் தேக்கரண்டி அளவு தேன் கலந்து படுக்கைக்குச்செல்லும் அரை மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து குடித்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஆரஞ்சுப்பழச்சாறு உடலை புத்துணர்வுடன் இருக்க வைக்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்படவும் உடலுக்கு முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கும். பல் வலி, ஈறு வீக்கம், ஈறில் இரத்தம் வருதல் போன்ற கோளாறுகளை குணமாக்கும். ஆரஞ்சுப்பழம் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு முதலியவற்றை குணமாக்கும் வலிமை கொண்டது. ஆரஞ்சுப்பழத்தை முகத்தில் தேய்த்துவந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். பசும்பாலில் ஓரிரு சொட்டு ஆரஞ்சுப்பழச்சாறு கலந்து முகத்தில் தடவிவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். ஆரஞ்சில் பல வைட்டமின்களோடு, சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து இருக்கிறது. பல நாட்களாக வியாதியில் பாதிக்கப்பட்டு தேறியவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை டானிக். உடல் குளிர்ச்சி பெற, உடல் வலுப்பெற ஆரஞ்சு மரப்பூ சிறந்தது. ஆரஞ்சுப்பழச்சாறை கர்ப்பிணிகள் தினமும் ஒரு டம்ளரில் சிறிதறவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். ஆரஞ்சுப்பழத்தோலை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் வேகவைத்து அந்த நீரில் வாய் கொப்பளிக்க பற்களில் உள்ள கிருமிகள் அழியும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி, பல் ஈறுகளில் இரத்தம் போன்றவையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப்பழச்சாற்றை ஒரு வாரம் கொப்பளித்து விழுங்கி வந்தால் நிவாரணம் கிடைக்கும். ஆரஞ்சுப்பழத்திலுள்ள வைட்டமின் சி உருவாக கொலாஜென்எ ( COLLAGEN ) ன்ற வளர்ச்சி உண்டாக்கக் கூடிய சத்து - எலும்புகள், இரத்தகுழாயின் உட்புறச் சுவர் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சுப்பழம் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக்குறைக்கவும், நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சுப்பழம் குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எப்போதும் சுறுசுறுப்புடனும், நோய் தாக்குதலின்றி உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க உதவுகிறது. மாதவிலக்குக் காலங்களில் ஒருசிலருக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு உடல் சோர்ந்து, மன உளைச்சல் ஏற்பட்டால், இவர்கள் ஆரஞ்சுப்பழச்சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து குடித்துவந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவார்கள். ஆரஞ்சுப்பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் வறட்சியை போக்கும், முகம் அழகு பெறும், தலைச்;சுற்றல் நீங்கும், வாய் துர்நாற்றம் போக்கும், தாகத்தைத் தணிக்கும் மருந்தாகும். ஆரஞ்சுப்பழத்தின் தோலை உலர்த்தி, அதில் சிறிது ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பொடி செய்து தினமும் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
100 கிராம் எடை கொண்ட ஆரஞ்சுபழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி – 53 கிராம் , வைட்டமின் ஏ – 99 மி.கிராம், வைட்டமின் பி – 40 மி.கிராம், வைட்டமின் பி2 – 18 மி.கிராம், வைட்டமின் சி – 80 மி.கிராம், நீர்ச்சத்து – 88 கிராம், பாஸ்பரஸ் - 18 மி.கிராம், கரோட்டின் - 1100 மி.கிராம், சுண்ணாம்புச்சத்து – 24 மி.கிராம், இரும்புச்சத்து – 0.2 மி.கிராம், புரதம் - 0.6 கிராம், கொழுப்பு – 0.2 கிராம், தாதுப்பொருள் - 0.3 கிராம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 17-05-2022
17 May 2022 -
ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ சோதனை: நாடு முழுவதும் 9 இடங்களில் நடைபெற்ற சோதனையால் பரபரப்பு
17 May 2022250 சீனர்களுக்கு சட்ட விரோத விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான க
-
ரூ.38 ஆயிரத்தை தாண்டியது: தங்கம் விலை சவரனுக்கு 344 ரூபாய் அதிகரிப்பு
17 May 2022சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.
-
திறமையான மாணவர்களை உருவாக்கவே தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் : தனியார் பல்கலை. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
17 May 2022செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
-
ரூ. 46 கோடியில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
17 May 2022சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
-
மோசமான வானிலை: சாலை மார்க்கமாக உதகைக்கு சென்றார் துணை ஜனாதிபதி
17 May 2022கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
-
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாலஸ்தீனர்கள் இடையே மோதல் : 100-க்கும் மேற்பட்டோர் காயம்
17 May 2022ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவர இலக்கு : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
17 May 2022புதுடெல்லி : அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை
-
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
17 May 2022பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
அசாம், அருணாச்சல்லில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
17 May 2022திஸ்பூர் : அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தவிருந்த பிட் பேப்பர்கள் கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் கண்டுபிடிப்பு : அரசு தேர்வுகள் பறக்கும்படையினர் பறிமுதல்
17 May 2022நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
-
நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 May 2022சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
-
இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபயேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
17 May 2022கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
-
எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை: சோதனை குறித்து சிதம்பரம் விளக்கம்
17 May 2022சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
-
இலங்கை மக்களுக்கு உதவ சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று புறப்படுகிறது
17 May 2022சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
-
ஐ.டி.ஐ.தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான கல்விச்சான்றிதழ்: தமிழக அரசாணை வெளியீடு
17 May 2022ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களிப்பு: இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
17 May 2022பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
-
ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது: இலங்கை மக்களுக்கு இரு மாதங்கள் மிக கடினமானதாக இருக்கும்: ரணில் பேச்சு
17 May 2022கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
-
திரிகோணமலையில் இருந்து வெளியேறினாரா மகிந்த ராஜபக்சே?
17 May 2022கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மறு பரிசீலனை செய்யும் : அமெரிக்கா நம்பிக்கை
17 May 2022வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
இந்திய - ஆப்பிரிக்க உறவு ஆழமானது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
17 May 2022புதுடெல்லி : இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
நிலக்கரி ஊழல் வழக்கு: திரிணமூல் எம்.பி. அபிஷேக்கிடம் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் : சுப்ரீம் கோர்ட் அனுமதி
17 May 2022புதுடெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்
-
தொடர் மழை: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரிப்பு : 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
17 May 2022கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 1000 கன அடியாக அதிகரித்தது.
-
மத்திய அமைச்சர்களுடன் இன்று தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு : நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
17 May 2022சென்னை : தி.மு.க.
-
தென்மேற்கு பருவமழை முன்பே தொடங்குகிறது: தென் தமிழகத்தில் கூடுதல் மழை பொழிவுக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
17 May 2022வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.