எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தலுக்கு பிறகு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று இறுதியில் தணிக்கை வாரியத்துக்குச் சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அதனால், ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பிப். 20-ம் தேதி வெளியீடாக ஜன நாயகன் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்கவில்லையாம். இதனால், இப்படம் தேர்தலுக்கு பின்பே வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் விஜய் பிறந்த நாள் என்பதால் அம்மாதம் படம் வெளியிடப்படலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


