எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளேயே முழுமையாக நம்பி உள்ளனர். இந்நிலையில், பருவ மழை மாற்றங்களினால் ஏற்படும் தீவன தட்டுப்பாட்டோடு நோய் பரவலையும் வேதனையுடன் சந்தித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களினால் உற்பத்தி திறன் வெகுவாக குறைவதோடு சில சமயம் கால்நடைகளேயே இழக்கவும் நேரிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களில் கோமாரி நோயின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோமாரி நோய் கால்க்காணை வாய்க்காணை என்றும், கால்சப்பை வாய்சப்பை என்றும் வேறு சில பெயர்களால் அழைக்கபடுவதுண்டு. இந்நோய் “பிக்கார்னா வைரஸ்” என்னும் நச்சுயிரியால் உண்டாகிறது. இந்நோய்க் கிருமியில் 7 வகைகள் உள்ளன. அவற்றுள்; நம்நாட்டில் 4 வகைகளும், 60 க்கும் மேற்பட்ட உட்பிரிவு வகைகளும் உண்டு. ஒவ்வொன்றும் நோய் ஏற்படுத்தும் விதத்தில் வேறுபட்டவை. மேலும்,இந்நச்சுயிர் கிருமி மாறிவரும் தட்ப வெப்ப நிலையை தாங்கி அதிக நாட்கள் உயிருடன் வாழும் குணமுடையது.
நோய் பரவல் மற்றும் அறிகுறிகள் : மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடைகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்நோய்க் கிருமி நோயுற்ற கால்நடைகளிலிருந்து மற்றொன்றிற்கு அதே இனத்திலிருந்தோ அல்லது வேறு இனத்திலிருந்தோ நேரடியாகவும் அல்லது இக்கிருமி கலந்த தண்ணீர், உணவு மற்றும் உபகரணங்கள் மூலமாகவும் அல்லது காற்றின் மூலமாகவும் பரவக்கூடியது.
நோய் கண்ட மாடுகள் குணமான பிறகு இக்கிருமிகளை ஒரு வருடத்திற்கு மேலாக தமக்குள் தக்கவைத்து கிருமிகளை வெளிப்படுத்தும். அதேபோல் ஆடுகள் ஆறு மாதத்திற்கும், பன்றிகள் ஒரு மாதத்திற்கும் கிருமிகளை தக்கவைத்து வெளிப்படுத்தும்.
இந்நோய் கண்ட மாடுகள் கீழ்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்: அதிக காய்ச்சலுடன் சோர்வுற்று, சரிவர தீவனம் எடுக்காமல் இருக்கும் உதடுகளின் உட்புறம்,ஈறுகள், மேல்தாடை, நாக்கு, கன்னங்களின் உட்புறம் ஆகிய இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு பின்பு உடைந்து புண்கள் உண்டாகும்.
வாயிலிருந்து சளி போன்ற நுரையுடன் கூடிய உமிழ்நீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும். அசை போடுவது போன்று வாயை அசைத்து ‘சப்’‘சப்’ என்ற சத்தம் எழுப்பும். கால்களில் வீக்கம் ஏற்பட்டு, சூடு அதிகமாகி, குளம்புகளுக்கிடையேயும்,குளம்பிற்கு மேலுள்ள தோலிலும் கொப்புளங்கள் தோன்றுகின்றன. பாதிக்கப்பட்ட கால்நடைகள் நொண்டும்.பின்பு கொப்புளங்கள் உடைந்து புண்கள் உண்டாகும். புண்களில் ஈக்கள் உட்கார்வதன் மூலம் புழுக்கள் வைக்கலாம்.
மாடுகளில் மடியிலும், காம்புகளிலும்கொப்புளங்கள் தோன்றும். இதனால் பால் குறைவதுடன் மடிவீக்கமும் ஏற்படும். இந்நோய் கண்ட கறவை மாடுகளிலிருந்து பாலினைக் குடிக்கும் கன்றுகள் தீவிர இதய தசை அழற்சியினால் இறந்துவிடும். நோயுற்ற பசுக்களில் சினை பிடிப்பது சிரமமாக இருக்கும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.
இந்நோய் மாடுகளில் அதிகம் உயிர்ச்சேதம் ஏற்படுத்தாவிட்டாலும், உற்பத்தி திறன் மற்றும் உழைக்கும் சக்தியைக் குறைத்து விடுவதால் அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும்.நோயுற்றகால்நடைகளில் நாளமில்லா சுரப்பிகளில் மாற்றம் ஏற்படுவதால் தோல் உலர்ந்து சொறசொறப்பாகவும், உரோமங்கள் உதிர்வும் காணப்படும்.
தடுப்பு முறைகள் : கோமாரி நோய் வராமல் தடுக்க கன்றுகளுக்கு 8 வார வயதில் முதல் தடுப்பூசியும், 12 வார வயதில் இரண்டாவது தடுப்பூசியும், 16 வார வயதில் மூன்றாவது தடுப்பூசியும் போட வேண்டும். பிறகு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். நோய் கிளர்ச்சி காணும் இடங்களில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என வருடத்திற்கு மூன்று முறைதடுப்பூசி போட வேண்டும். பொதுவாக மழைக்காலத்திற்கு முன்பும் கோடைக் காலத்திற்கு முன்பும் தடுப்பூசி போட வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான கால்நடைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். நோய் கண்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போட கூடாது. முதிர்ந்த சினையுடனும், கன்று ஈனும் தறுவாயில் உள்ள கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடலாம். கால்நடைகள் பராமரிக்கும் கொட்டகைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நோய் கண்ட கால்நடைகள் பராமரிப்பு : நோயுற்ற கால்நடைகளை மற்ற ஆரோக்கியமான கால்நடைகளிலிருந்து பிரித்து சுத்தமான பகுதிகளில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வாய் மற்றும் கால் புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது படிகார கரைசலைக் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். போரிக்ஆசிட் பவுடர் மற்றும் கிளிசரின் கலவையை வாய் புண்களில் தடவலாம். நாக்குப் புண் இருப்பதால் சரியாக சாப்பிட இயலாத கால்நடைகளுக்கு கம்பு அல்லது கேழ்வரகு கஞ்சியில் குளுக்கோஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.
கால் குளம்புகளில் உள்ள புண்களில் சில சமயம் ஈக்கள் மூலம் புழுக்கள் வைக்கலாம். புண்களில் டர்பென்டைன் ஆயில் இடுவதன் மூலம் புழுக்களை இறக்கச் செய்து வெளியே எடுத்து விடலாம் பிறகு புண்கள் ஆறுவதற்கு ஆன்டிசெப்டிக் பவுடரும்,ஈக்கள் உட்காராமல் தடுக்க வேப்பெண்ணையோ அல்லது ஆயின்மென்டோ தடவ வேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கோமாரி நோய் கண்ட மாடுகளின் பாலை கன்றுகளுக்கு ஊட்ட விடக்கூடாது. பாலைக் காய்ச்சிய பின்னரே கொடுக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளை பராமரிக்கும் இடங்களில், இடத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்தை தெளிக்க வேண்டும். நோயுற்ற மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர்ந்த தீவனம் அளிக்கும் போது மீதமாகும் தீவனத்தை மற்ற மாடுகளுக்கு அளிக்க கூடாது. அவற்றினை எரித்து விட வேண்டும்.
நோயுற்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. நோய் கிளர்ச்சியுற்ற காலங்களில் கால்நடைகளை சந்தைகளில் வாங்குவதையோ, விற்பதையோ தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்புசி போடப்பட்டு வருகிறது. அனைத்து கால்நடைப் பண்ணையாளர்களும் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகவும்.
நோய் வந்தபின் கால்நடைகளின் உற்பத்தி குறைவு, மலட்டுத்தன்மை மற்றும் இறப்பு போன்றவற்றால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு காலத்தே தடுப்பூசி போடுவோம், நோய் வருமுன் காத்து வளமோடு வாழ்வோம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களைத் தொடர்புக் கொண்டு விவரங்கள் அறியலாம்.
தொடர்புக்கு - கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625.
தொகுப்பு - மரு.மு.வீரசெல்வம், மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சோ.யோN கஷ்பிரியா, மரு.மா.வெங்கடேசன், மரு.ம.சிவகுமார், மரு.ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
26 Dec 2025சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
தமிழ்நாட்டில் மதவெறி ஆட்டத்துக்கு இடமில்லை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
26 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ.
-
அ.தி.மு.க.வில் விருப்பமனு பெற அவகாசம் டிச. 31-வரை நீட்டிப்பு
26 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் ஜனவரி 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
வங்காள தேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக்கொலை
26 Dec 2025டாக்கா, வங்காள தேசத்தில், மேலும் ஒரு இந்து இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.
-
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2025சென்னை, தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
அதிபர் ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
26 Dec 2025கீவ், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம்.
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
குஜராத்தில் நிலநடுக்கம்
26 Dec 2025காந்தி நகர், குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் வெள்ளிக்கிழமை(டிச.26) அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


