முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் நேற்று தொடர் மழை: சாலையில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வியாழக்கிழமை, 2 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-: ராமேசுவரத்தில் நேற்று தொடர்ந்து பலத்த  மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை  பாதிப்படைந்தது.

ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலையில் தொடங்கப்பட்ட மழை தொடர்ந்து பகல் முழுவதும் பெய்தது.இதனால் கட்டிட வேலை மற்றும் மீன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் கூலி்த்தொழிலாளிகள் உள்பட  பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.மேலும் கோவில்,நகராட்சி,தனுஸ்கோடி,காந்திநகர்,மார்க்கெட் ஆகிய பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும்,ராமேசுவரம் திருக்கோயிலுக்கு வந்த பக்தர்களும் சாலையை கடக்க முடியாமல் தவித்தனர்.அதுபோல வாகனங்களும் ஊர்ந்து கடந்து சென்றனர். மேலும்  இந்த பகுதிகளில் மாலை 6 மணிவரை விடாமல்  தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிட தக்கது. . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து