எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை - போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பெண்கள் நேரில் வந்து புகார் கொடுக்க தயங்குவதால், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என சிவகங்கை எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு புகார் சென்றன.
இதையடுத்து, குற்றங்கள் அடிக்கடி நடக்கும் பகுதியில் மகளிர் போலீசார் மூலம் நேரில் சென்று புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்தி இருந்தார்.
இதன்படி சிவகங்கை நெல்மண்டி தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 'நடமாடும் ஆலோசனை' முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமை வகித்து பேசினார். அரசு மருத்துவமனை டாக்டர் சூரியநாராயணன், அரசு வழக்கறிஞர் குருதாஸ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேணுகோபால் பேசினர்.
இன்ஸ்பெக்டர் மோகன் பேசியதாவது: வயதான பெற்றோரை இன்று கவனிக்காமல் விட்டால், நாளை உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அதை தான் செய்வார்கள். சமீப காலமாக இதுபோன்ற புகார்கள் தான் போலீசுக்கு அதிகம் வருகின்றன. பெண்கள் தயக்கமின்றி போலீசில் புகார்களை கொடுக்க முன்வர வேண்டும். சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குற்றம் நடப்பது தெரியவந்தால் உடனடியாக அவசர போலீஸ் உதவி எண் 100 க்கு போன் செய்ய வேண்டும்.
வீடுகளின் சுவர்களில் வட்டம், முக்கோணம், சதுரம், பெருக்கல் குறி, வட்டத்திற்குள் புள்ளி போன்ற குறியீடுகள் இருந்தால் உடனே அதை அழித்து விடுங்கள். திருடர்கள் இரவில் திருடுவதற்கு பகலில் நோட்டம் பார்த்து இத்தகைய குறியீடுகளை குறிக்கின்றனர். தெருக்களில் நகை பாலீஷ் போடுவதாக வருவோர் வீடுகளில் புகுந்து திருடுவதற்கு துணை போவது தெரியவந்துள்ளது.
இரவில் பின்பக்க கதவுகள், தலைவாசல் கதவுகளை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து விட்டு படுக்க செல்லுங்கள். ஆண்கள் வெளியே செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லும்படி பெண்கள் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் தங்களது புகார்களை தயக்கமின்றி கூறலாம் என போலீசார் அறிவித்ததும், பல பெண்கள் முன்வந்து பேசினர்.
அவர்கள் பேசியதாவது:உஷா,சோமநாதபுரம் கோயில் தெரு: எங்கள் தெருவில் பல தகாத செயல் நடக்கிறது. தினமும் காலை7:00 மணிக்கு டியூசன் படிக்க செல்லும் ஒரு மாணவியை ஒரு பையன் பின்தொடர்ந்து செல்கிறான். பகல் 1:00 மணிக்கு குடிகாரர்கள் தள்ளாடியபடி நடப்பதால் தெருவில் பெண்கள் நடக்க முடியவில்லை. கஞ்சா விற்பதும் அந்த தெருவில் தான் நடக்கிறது.
சுதா, தியாகி சேதுராமச்சந்திரன் தெரு: வீட்டு முன் காரை நிறுத்தினால் கண்ணாடியை உடைத்து விடுகிறார்கள். டூவீலர்களை நிறுத்தி வைத்தால் இரவில் பெட்ரோல் திருடுகிறார்கள். டூவீலர்களில் வேகமாக செல்கின்றனர். குழந்தைகள் நடமாடுகின்றன. ஏன் வேகமாக செல்கிறீர்கள் என கேட்டால் ஆபாசமாக பேசுவதுடன், உன் பிள்ளையை வீட்டிற்குள் வைத்துக்கொள், தெருவில் ஏன் விடுகிறாய் என்று கேட்கிறார்கள்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து இன்ஸ்பெக்டர் மோகன் பேசுகையில், ''தவறு செய்பவர்கள் குறித்து 100 ம் நம்பருக்கு போன் செய்து தகவல் தெரிவியுங்கள். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்,'' என்றார்.நிகழ்ச்சியில் எஸ்.ஐ.,க்கள் மகேஸ்வரி, தமிழ்செல்வி பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சண்முகராஜன், ராஜபாண்டி, ஜெயக்குமார் செய்திருந்தனர
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ