எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை : தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம் என்று சிவகங்கை விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சிலகங்கையில் நேற்று எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ரு.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்.
முன்னதாக இந்த விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
வீரம் செறிந்த மண்
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் முதலாக வெள்ளையரை எதிர்த்து, வீரப் போர் புரிந்து, வெற்றி கண்டு, வீரமங்கை என்று பெயரெடுத்த ராணி வேலு நாச்சியார் ஆண்ட மண் சிவகங்கை. தியாகத்திற்கும், விசுவாசத்திற்கும், இலக்கணமாய் வாழ்ந்த மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி, சிவகங்கை பூமி. தனது இன்னுயிரை கொடுத்து,வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்த,தியாக மங்கை, வீரத்தாய் குயிலிவளர்ந்த பூமி இந்த சிவகங்கை.வீரம் செறிந்த மண், தியாகம் நிறைந்த மண், வெற்றி திகழ்ந்த மண்,என்று தமிழகமே பெருமை கொள்ளும் இந்த சிவகங்கை சீமையில், புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க மாபெரும் இயக்கம்
எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழா, மக்கள் நடத்துகிற மகத்தான விழாவாக, உலகமே வியக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் மங்காத மக்கள் செல்வாக்கைப் பார்த்து, நமது எதிரிகள் மலைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அசைக்க முடியாமல், சில உதிரிகள் களைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மட்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால், சில சுயநலவாதிகள் கச்சத் தீவை தாரை வார்த்தது போல, தமிழ் நாட்டையே தாரை வார்த்திருப்பார்கள்.
புகழுக்காக ஏங்கியவர் அல்ல
மக்கள், தங்களது தேவைகளை கடவுளிடம் வேண்டுகிறார்கள். எங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடு, மகிழ்ச்சியைக் கொடு, நிம்மதியைக் கொடு, பாதுகாப்பைக் கொடு என்று தங்களுக்கு வேண்டியதை ஆண்டவனிடம் கேட்பார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது தவப் புதல்வனை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான் ஆண்டவன். அவர்தான் கொடை வள்ளல் நமது எம்.ஜி.ஆர். சிலரைப் போல, சொத்து சேர்க்க ஆசைப்பட்ட தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர். ! மக்களின் அன்பை சேர்த்தவர் நமது எம்.ஜி.ஆர் ! சிலரைப் போல, புகழுக்காக ஏங்கிய தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர்! ஏழைகளின் துன்பங்களை நீக்கி புகழின் உச்சிக்கு சென்ற தலைவர் நமது எம்.ஜி.ஆர் !சிலரைப் போல, குடும்பத்திற்காக ஆட்சி நடத்தியவர் அல்ல நமது எம்.ஜி.ஆர் !ஆட்சிக்குள்ளே குடும்பத்தின் தலையீடே இருக்கக் கூடாது என்று ஆணையிட்டவர் நமது எம்.ஜி.ஆர் ! மக்களின் பசியாற்றி, அவர்களின் வயிறும், மனமும் நிறைவதைப் பார்த்து நிம்மதி அடைந்தவர் எம்.ஜி.ஆர் ! எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு உருவாக்கி தந்த உன்னத தலைவர் எம்.ஜி.ஆர் ! பிறருக்கு கொடுத்து வாழ்வதையே கொள்கையாக கொண்டு வாழ்ந்த எம்.ஜி.ஆர் ! கொடுப்பதற்கு நல்ல மனம் வேண்டும். அதுவும் பிறவி குணமாக இருக்க வேண்டும்.
அம்மாவின் ஆட்சி...
ஏழைகள் இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்..அந்த அன்பு மழைதான்,இன்றும்தமிழ் நாட்டையே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலே ஜாதிச் சண்டைகள் இல்லை. மதச் சண்டைகள் இல்லை. அதற்கு காரணம் அம்மாவின் ஆட்சி. தமிழ் நாட்டில் அடுப்பெரியாத வீடுகள் இல்லை. விளக்கெரியாத வீதிகள் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி. பிள்ளைகளைப் படிக்க வைக்க வசதி இல்லையே, என்று மனம் உடையும் பெற்றோர்கள் தமிழ் நாட்டில் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி.
இரட்டை இலை சின்னம்
மக்கள் பணத்தை தனக்காக சுருட்டுவது அராஜக ஆட்சி. மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுப்பது ஜனநாயக ஆட்சி. அந்த ஜனநாயக ஆட்சிக்குப் பெயர்தான் அம்மாவின் ஆட்சி. எம்.ஜி.ஆரை போலவே,கொடுக்கின்ற குணமும், ஏழைகளின் பசியாற்றுகின்ற குணமும், பிறவிக் குணமாய் பெற்று வந்தவர் அம்மா. எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா, தமிழக மக்களின் இதயத்தில் இருக்கிறார்கள். விசுவாசத் தொண்டர்களின் உள்ளத்தில் இருக்கிறார்கள். அந்த இரண்டு தெய்வங்களின் ஆசிகளோடு,தற்காலிகமாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்து, நமது வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம். சின்னம் நமக்குத்தான் கிடைக்கும் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், மக்களை ஏமாற்ற சிலர் மனசாட்சியின்றி பொய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது
26 Oct 2024சேலம் : நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக இருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2024.
26 Oct 2024 -
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
26 Oct 2024சென்னை, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தொப்புள் கொடி விவகாரம்: யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம்
26 Oct 2024சென்னை : தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககத்துக்கு யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
-
விக்கிரவாண்டியில் இன்று த.வெ.க. முதல் மாநாடு : முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்
26 Oct 2024விக்கிரவாண்டி : நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.
-
விழுப்புரம், விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது: நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு
26 Oct 2024விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறுகிறது நடிகர் விஜய் கட்சி த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு.
-
ஒபாமாவுக்கு நோபல் பரிசு: டொனால்டு டிரம்ப் விமர்சனம்
26 Oct 2024வாஷிங்டன் : ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
சூடானில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி
26 Oct 2024கார்டோம் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
26 Oct 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கார் -லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
-
ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
26 Oct 2024டெல் அவிவ் : ஈரான் மீது நேற்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்து விட்டதாக அறிவித்துள்ளது.
-
தமிழக அரசு வழங்கும் தீபாவளி சிறப்புத் தொகுப்பு நாளை முதல் விற்பனை: அமைச்சர்
26 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையைொட்டி, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு மளிகைப
-
தீபாவளியை முன்னிட்டு தனியார் பஸ்களை இயக்கும் முடிவை அரசு கைவிட ஓ.பி.எஸ். கோரிக்கை
26 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
-
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா
26 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி : டுவிட்டரில் மத்திய அரசு மீது சாடல்
26 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
-
கேரளாவில் இன்று கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
26 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்
26 Oct 2024ராவல்பிண்டி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
கடைசி டெஸ்ட்...
-
மதுரையில் மழை பாதிப்பு உதவி எண்கள் அறிவிப்பு
26 Oct 2024மதுரை : மதுரையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம் : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
26 Oct 2024சென்னை : இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை முந்துகிறார் டிரம்ப் : புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
26 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்
-
மதுரையில் கனமழை பாதிப்பு: மீட்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஆலோசனை
26 Oct 2024சென்னை : மதுரையில் கனமழை பாதிப்பை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா
-
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் அரசு கடும் எச்சரிக்கை
26 Oct 2024தெஹ்ரான், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
-
மாநாட்டிற்கு வரும் த.வெ.க. தொண்டர்களுக்கு ஸ்னாக்ஸ்: விஜய் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு
26 Oct 2024சென்னை, விக்கிரவாண்டியில் இன்று நடக்கும் விஜய் கட்சி மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மாநாட்டிற்கு வரும் தொண்டர்களு
-
மகராஷ்டிர தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
26 Oct 2024மும்பை, மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமது இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ்.தோனி நியமனம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 Oct 2024ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவிக
-
எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
26 Oct 2024புதுடெல்லி : 'எலான் மஸ்க் ஒரு அற்புத மனிதர். எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.