எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சட்டசபை கேள்வி நேரத்தில், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.ஜெயசங்கரன், 'ஆத்தூரில் இருந்து திருப்பதிக்கு பேருந்து இயக்க அரசு முன்வருமா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு, 'ஆத்தூர்-திருப்பதி வழித்தடம், தமிழ்நாடு, ஆந்திரா இரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி ஆகும். எனவே இருமாநில ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் போது பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயசங்கரன், 'தலைநகர் சென்னையில் தற்போது நூற்றுக்கணக்கான புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த புதிய பேருந்துகளை இயக்குவதற்கான உரிமைகள் தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், தினசரி கலெக்ஷன் தொகையை காட்டிலும் இருமடங்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறு எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன? எந்த நிறுவனத்துக்கு குத்தகைவிடப்பட்டிருக்கிறது? அதன் தொகை எவ்வளவு? அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு எவ்வளவு? என்ற துணைக்கேள்வியையும் அவர் எழுப்பினார். அதற்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பதில் வருமாறு:-
மின்சார பேருந்துகள் தனியார் ஒப்பந்த பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அது அந்த பேருந்துகளை தயாரிக்கும் அசோக்லைலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ''ஓம்'' நிறுவனம்தான் இயக்குகிறது. அவர்கள் தயாரிக்கும் வாகனத்தை அவர்களே தயாரித்து, அவர்களே இயக்குகிறார்கள். இதில் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


