எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் : ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறையில் பத்து ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வந்த சிறைக் கைதிகளை சட்டத்திற்கு உட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை முன்விடுதலை செய்ய அம்மாவின் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் என்றும் திண்டுக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:
1) திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.
2) திண்டுக்கல் காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை திண்டுக்கல் மாநகராட்சி உட்பட 7 பேரூராட்சிகள் மற்றும் 816 ஊரக குடியிருப்புகளுக்கு விரிவாக்கம் செய்யும் பொருட்டு விரிவான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
3) வேடசந்தூர் பேரூராட்சியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால்கள் அமைக்கப்படும். 2018-19ம் ஆண்டு மூலதன மான்ய நிதியின் கீழ் ஒதுக்கீடு பெறப்பட்டு, இப்பணி மேற்கொள்ளப்படும். இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
4) குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.பில்லமநாயக்கன் பட்டியிலும், வடமதுரை ஒன்றியம், புத்தூரிலும் புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.
5) சித்தமருத்துவ படிப்பிற்கு உள்ள கூடுதல் தேவையை கருத்திற்கொண்டு 60 மாணவர்கள் படிக்கும் வகையில் பழநியில் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்
6) வேடசந்தூர் ஒன்றியம், ரெங்கநாதபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்.
7) திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 11.68 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
8) திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 28.5 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ பட்ட மேற்படிப்பு துவங்குவதுடன், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
9) திண்டுக்கல் மாவட்டம் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.
10) 82.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வளரிளம் பருவத்தினர் பாதுகாப்புத் திட்டம், மருந்து கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும்.
11) நிலக்கோட்டை மற்றும் வடமதுரை வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
12) அம்மையநாயக்கனூர் சமுதாய சுகாதார நிலையத்தில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
13) கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் அமைக்கப்படும்.
14) பழனி அரசு மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
15) ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 8.22 லட்சம் ரூபாய் மதிப்பில் டயாலிசிஸ் கருவி வழங்கப்படும்.
16) நத்தம் கிராமத்தில் திருமணி முத்தாற்றின் குறுக்கே அமைந்துள்ள காட்டு பெரிய குளம் அணைக்கட்டினை 3 கோடி ரூபாய் மதிப்பில் திரும்பக் கட்டப்படும்.
17) நத்தம் வட்டம், கோசுகுறிச்சி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலூத்துகுளம் அணைக்கட்டினை 2.72 கோடி ரூபாய் மதிப்பில் திரும்பக் கட்டப்படும்.
18) ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாக்சி கிராமத்தில் நங்காஞ்சியார் ஆற்றின் குறுக்கே 1.33 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.
19) நிலக்கோட்டை வட்டம், சித்தர்கள் நத்தம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே எல்.எஸ்.35.05 கி.மீ-ல் 12.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.
20) நிலக்கோட்டை வட்டம், குன்னவராயன்கோட்டை கிராமத்தில் உச்சப்பட்டியின் அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே 2.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.
21) நிலக்கோட்டை வட்டம், கனவாய்பட்டி கிராமத்தில் நெடுகை மஞ்சளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
22) நத்தம் வட்டம், முளையூர் கிராமத்திற்கு அருகே திருமணிமுத்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
23) நத்தம் வட்டம், புன்னப்பட்டி கிராமத்திற்கு அருகே காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டிற்கு கீழ்புறத்தில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
24) நிலக்கோட்டை வட்டம், கொன்னம்பட்டி கிராமத்தில், இராவூத்தர் தோட்டத்திற்கு அருகே மருதாநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
25) ஒட்டன்சத்திரம் வட்டம், ஜவ்வாதுப்பட்டி கிராமத்தில், நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
26) ஆத்தூர் வட்டம், வேலகவுண்டன்பட்டி அருகே சீவல்சரகு கிராமத்தில் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
27) வேடசந்தூர் வட்டம், மாரம்பாடி கிராமத்தில் வேலம்பாடி குடியிருப்பு அருகே சந்தானவர்தினி ஆற்றின் குறுக்கே 4.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.
28) மோர்பட்டி-சித்துவார்பட்டி சாலையில் சிறுபாலம் கட்டப்படும்.
29) வடமதுரை-வேலாயுதம் பாளையம் செங்குறிச்சி சாலையில் பாலம் கட்டப்படும்.
30) பழனி-கொழுமம் சாலையில் பிரிந்து சின்னகாந்திபுரம் வழியாக செல்லும் சண்முகம்பாறை சாலையில் பாலம் கட்டப்படும்.
31) அம்பிளிக்கை-குத்திலுப்பை சாலையில் பாலம் கட்டப்படும்.
32) சக்கையநாயக்கனுhர் - ஜங்கில்பட்டி வழியிலுள்ள, அழகம்பட்டி சாலையில் பாலம் கட்டப்படும்.
33) கள்ளிமந்தையம்-ஓடைப்பட்டி சாலையில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்படும்.
34) அய்யலுhர்-ஆலம்பட்டி சாலை கிமீ 7/2-ல் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்படும்.
35) திண்டுக்கல்-குஜிலியம்பாறை-கரூர் சாலையில் உள்ள ரயில்வே கடவு எண்.6க்கு மாற்றாக வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை 16.18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
36) திண்டுக்கல் நகருக்கு புறவழிச்சாலை 19.25கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படும். இப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
37) பழனி தாராபுரம் சாலையில் உடுமலைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.63க்குப் பதிலாக ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். இப்பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
38) திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தில் புதிய நத்தம் உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் மற்றும் மின் கட்டண வசூல் மையம்,
39) திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் சின்னலூப்பை, சின்னாளப்பட்டி, மற்றும் லட்சுமணப்பட்டியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
40) வாகரை, கோவிலூர், எரியோடு, அய்யலூர், இராமராஜபுரம், மற்றும் அய்யம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகள் அமைக்கப்படும்,
41) சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையம் 2.49 கோடி ரூபாய் செலவில் திறன் உயர்த்தப்படும்.
42) திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தில் புதிதாக கணினி முறையில் மின் தடை பழுது நீக்கும் மையம் நிறுவப்படும்.
சிறை கைதிகள் முன்கூட்டியே விடுதலை:
அவர் மேலும் பேசுகையில், நீண்ட நாட்களாக பொதுமக்கள் முக்கியமான கோரிக்கையை அரசுக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறையில் பத்து ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வந்த சிறைக் கைதிகளை சட்டத்திற்கு உட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை முன்விடுதலை செய்ய அம்மாவின் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.