முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்டத்தில் 68 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நடவடிக்கை

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, நெல்லை மாவட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்கண்டவர்கள் இன்று (நேற்று) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், தலைமைக் கழக பேச்சாளர் முருகன், கல்லூர் வேலாயுதம் (மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர்), ஏ.பி.பால் கண்ணன் (திருநெல்வேலி தொகுதி முன்னாள் செயலாளர்), ஈஸ்வரன் (மாவட்ட துணைச் செயலாளர்), சங்கர பாண்டியன் (புளியங்குடி நகர செயலாளர்), பரமசிவன் (பண்பொழி பேரூராட்சி செயலாளர்), கோபால கிருஷ்ணன் (சிவகிரி பேரூராட்சி செயலாளர்), ஸ்ரீவை சின்னத்துரை (மாவட்ட மாணவர் அணி செயலாளர்), தமிழ்செல்வி (பொதுக்குழு உறுப்பினர், திருநெல்வேலி தொகுதி), கற்பகம் குருநாதன் (பொதுக் குழு உறுப்பினர், வாசுதேவநல்லூர் தொகுதி) உள்ளிட்ட 68 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து