எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரில், வேலை மற்றும் கல்விக்காக பலர் தங்களது சொந்த ஊர்களை விட்டு அங்கு வசிக்கிறார்கள். இவர்களில் இளம் பெண்களும் தனியாக விடுதிகளில் தங்கியுள்ளனர். இதேபோல் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். அந்த மாணவிக்கு சமூக வலைத்தளத்தில் கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயதான வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது.
2 பேரும் நேரில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதுடன் விடுமுறை நாட்களில் வெளியே சென்று வந்தனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு விடுமுறை என்பதால், அந்த மாணவி தான் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து வெளியே வந்தார். காதலர்கள் காரில் பல இடங்களுக்கு வெளியே சென்றனர். இரவில் கோவை விமான நிலையம் பின்புறம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் 2 பேரும் காதல் மயக்கத்தில் தன்னிலை மறந்து மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மொபட்டில் அந்த வழியாக வந்த 3 பேர், கார் தனியாக நிற்பதை பார்த்து அருகில் சென்றனர். காரில் உள்ளே காதலர்கள் இருப்பதை அறிந்த அவர்கள் காரின் கதவை தட்டி திறக்குமாறு கூறி மிரட்டினர். இதனால் காரில் இருந்த காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பயத்தில் அவர்கள் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து அந்த 3 பேரும் அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து, காதலனுடன் இருந்த கல்லூரி மாணவியை வெளியே இழுத்தனர். அவரை விடாமல் காதலன் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காதலனின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே 3 பேரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக அங்கிருந்த மறைவான பகுதிக்கு கடத்தி சென்றனர். அவர்களிடம் இருந்து மாணவி தப்பிக்க போராடியபோது கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் மயங்கிய மாணவியை ஒருவர் பின் ஒருவராக என கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
அதிகாலை 2 மணியளவில் மயக்கம் தெளிந்த காதலன், தனது காதலியை தேடினார். ஆனால் அவரை காணவில்லை. உடனே கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தலையில் காயத்துடன் இருந்த காதலனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் அனாதையாக கிடந்த மொபட்டை கைப்பற்றினர். அது திருட்டு மொபட் என தெரியவந்தது.
பிறகு கல்லூரி மாணவியை போலீசார் தேடினர். இரவு நேரம் என்பதாலும், அந்த பகுதி தெருவிளக்கு வசதி இல்லாத பகுதி என்பதாலும் மாணவியை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் புதர் மறைவில் கல்லூரி மாணவி நிர்வாண கோலத்தில் கிடந்ததை கண்டுபிடித்தனர். அவரின் உடலில் காயங்களும் இருந்தன. போலீசார் அந்த மாணவியை மீட்டு, சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடிவந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். இந்த நிலையில் மாணவியை பலாத்காரம் செய்த 3 பேரையும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தனிப்படை போலீசார் அதிரடியாக சுட்டுப் பிடித்தனர். முன்னதாக துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் 3 பேரும் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுன், சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.
பின்னர் தப்ப முயன்ற மூவரை பிடிக்க முயன்றபோது தலைமை காவலர் சந்திரசேகரை அந்த கும்பல் இடது கையில் வெட்டியுள்ளனர். தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட தொடங்கிய போலீசார், 2 பேரை இரண்டு கால்களிலும் ஒருவரை ஒரு காலிலும் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேருக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிடிபட்ட தவசி, சதீஷ், கார்த்திக் ஆகிய மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடயவியல் நிபுணர் குழு சோதனை நடத்தியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
04 Nov 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியது.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இந்த ஆண்டில் மட்டும் ஐ.டி. நிறுவனங்களில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்
04 Nov 2025சென்னை: ஐ.டி. நிறுவனங்களில் இந்த அண்டில் மட்டும் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
04 Nov 2025சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியின் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
கிட்னி மோசடி வழக்கு: இ.பி.எஸ் குற்றச்சாட்டு
04 Nov 2025சென்னை: கிட்னி மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
என்னை கொலை செய்ய முயற்சி: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
04 Nov 2025சேலம், அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது அதிபர் ட்ரம்ப் தகவலால் பரபரப்பு
04 Nov 2025வாஷிங்டன்: ரஷ்யாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது என்று தெரிவித்த


