எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு அடுக்குமாடி கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை செய்தியாளர்களுடன் செயற்பொறியாளர் சீனிவாசன் நேற்று(20.03.2018) பார்வையிட்டார்.
பேட்டி
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள், புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரு சக்கர அடுக்கு மாடி வாகன கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு செய்தியாளர் பயணத்தில் செய்தியாளர்களிடம் செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்ததாவது,
தஞ்சாவூர் மாநகராட்சி கடந்த 17.02.2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாநகராட்சி அலுவலகம் தஞ்சாவூரின் முக்கிய பகுதியான காந்திஜி ரோட்டில் இயங்கி வருகிறது. மேற்படி கட்டடம் ;கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தற்பொழுது மாநகராட்;சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அலுவலகப் பணிகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும், மேற்கண்ட இடத்தில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் இடைவெளி நிரப்பும் திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலக வளாகம் 8300 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. புதியதாக கட்டப்படும் மாநகராட்சி அலுவலக கட்டடத்;தின் தரைத்தளம் 2200 சதுர மீட்டர் பரப்பளவில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, பொது சுகாதாரம், பிறப்பு- இறப்பு பதிவுகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஆணையாளர் அறை, கூட்ட அறை, வசூல் மையம், பொறியியல் பிரிவு மற்றும் மாநகர் நலப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் முதல் தளம் 1950 சதுர மீட்டர் பரப்பளவில் மேயர் அறை, மாமன்றக் கூடம், வருவாய் பிரிவு, மாநகரமைப்பு பிரிவு மற்றும் பதிவறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இரண்டாவது தளம் 1408 சதுர மீட்டர் பரப்பளவில் நில அளவை பிரிவு, உணவு உட்கொள்ளும் அறை, பணியாளர்களின் ஓய்வு அறை மற்றம் எதிர்கால விரிவாக்க பணிகளுக்கான கூடுதல் அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.
மேலும், இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் புல்தரை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் முன் பகுதி வலப்புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள், இடது புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் இரு சக்கர வாகனங்களில் வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாக புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர அடுக்கு மாடி வாகனம் நிறுத்துமிடம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.
இதனால் இரு சக்கர வாகனங்கள், மழை மற்றும் வெயில் காலங்களில் பாதுகாப்பாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநகராட்சியின் மூலம் புதிய அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. செய்தியாளர் பயணத்தில் மாநகராட்;சி உதவிபொறியாளர் என்.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுலவர் (செய்தி) போ.சுருளிபிரபு, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், பணி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்
21 Oct 2025மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
-
இந்திய கேப்டன் வேதனை
21 Oct 2025மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
-
ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
21 Oct 2025லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
21 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
-
இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60
21 Oct 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த இ.பி.எஸ்
22 Oct 2025திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு: அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
22 Oct 2025சென்னை, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டங்கள
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Oct 2025தஞ்சாவூர் : போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.