எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி -தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவிற்கான கொடியேற்றம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டபகப்படி நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய திருவிழாவான பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இத்திருத்தேரில் உற்சவமூர்த்தி சோமஸ்கந்தர் எழுந்தருள தேரோட்டம் கச்சேரி ரோடு, கீழரதவீதி, தெற்குரதவீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. இத்தேரோட்டத்தில் பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, நகர செயலாளர் என்.வி.ராதா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், பாலசுப்பிரமணிய திருக்கோவில் விழாகமிட்டியினர் சசிதரன், சிதம்பரசூரியவேலு, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், தக்கார் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் கழக விவசாய அணி கண்ணன், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், வி.ப.ஜெயபிரதீப், கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர் அன்பு, மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் நாராயணன், அரண்மனைசுப்பு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


