எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வைஷ்ணவி திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஏழை பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் திருமாங்கல்ய தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 115 பயனாளிகளுக்கு 920 கிராம் தங்கம் மற்றும் ரூ.39.25 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார். இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:-
நிதியுதவி வழங்கும் விழா
புரட்சித்தலைவி அம்மா தன்னலமில்லாமல் ஏழை பணக்காரர் வேறுபாடுயின்றி அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களுக்கு எவ்வித கவலையும் இருக்க கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். பெண்கள் நன்றாக படித்து பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதற்காகவே படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். அம்மா பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும், 10 ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. பின்பு புரட்சித் தலைவி அம்மா திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். பெண்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவும் ஏழைகள் தங்களின் குழந்தைகளின் திருமணத்திற்காக சிரமபடக் கூடாது என்பதற்காகவும் அம்மா இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். அம்மாவின் அரசு தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். அரசின் திட்டங்களை பெற்றுள்ள நீங்கள் இவைகளை பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். என பேசினார்.இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது:-திருநெல்வேலி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் மூலம் சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்த பட்டப்படிப்பு படித்த 42 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.21.00 லட்சம் உதவிதொகையும், 10 ம் வகுப்பு படித்த 73 பயனாளிகளுக்கு தலா ரூ.25 வீதம் ரூ.18.25 லட்சம் உதவிதொகையும,;; அனைவருக்கும் தலா 8 கிராம் தங்கமும் என மொத்தம் 115 பயனாளிகளுக் ரூ.39.25 லட்சம் உதவித் தொகையும், 920 கிராம் தங்கமும் இன்று வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டம் பெண்களின் படிப்பை ஊக்கவிக்கும் திட்டமாகும். நமது மாவட்டத்திலும் ஒரு சில சமூகத்தில் குழந்தை திருமணங்கள் செய்யும் பழக்கம் உள்ளது. இது போன்ற திட்டங்களால் படிக்க வைக்க வேண்டும் என்ற என்னமும், சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு எற்படும். விதவை மருமணம், கலப்பு திருமணம் உள்ளிட்ட பல்வேறு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டங்களும் உள்ளது. இன்று உதவித்தொகை பெறும் நீங்கள் இத்திட்டம் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை படிக்க வைக்க ஊக்கப்படுத்திட வேண்டும். சங்கரன்கோவில் பகுதியில் இலவச வைபை வசதி மற்றும் பல்வேறு கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரப்படும் என பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் ராஜேந்திரன், டான்பெட் துணை தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் தலைவர் ரமேஷ், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப்பையாபாண்டியன், முக்கிய பிரமுகர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.