முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் விஜயகுமாரி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்

இது குறித்து தமிழக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் ஏ.டி.ஜி.பி அளவிலான அதிகாரிகள் மற்றும் ஒருவர் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி அம்ரேஷ் புஜாரி சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த்முரளி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி மஞ்சுநாதா தொழில் நுட்பப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். தொழில் நுட்பப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி ஆபாஷ்குமார் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் விஜயகுமாரி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து