எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மருத்துவ துறையில் 242 உதவி மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308 மருந்தாளுனர்கள் உட்பட 1008 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று டாக்டர்களை முதல்வர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவதுறையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முன்னோடித் திட்டங்கள்...
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றார்கள் நம் முன்னோர்கள். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். எனவே, நோயில்லாத வாழ்வைப் பெறுபவனே மிகப்பெரிய செல்வந்தன் என்பதில் சந்தேகமில்லை. மனித குலத்தில் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். இன்றைக்கு தமிழ்நாடு மருத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் ஜெயலலிதா தீட்டிய முன்னோடித் திட்டங்கள் தான் என்பதை உலகு அறியும். அவரது ‘‘தொலைநோக்கு திட்டம் 2023"ல் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சுகாதார குறியீடுகளை தமிழ்நாடு அடையும் வண்ணம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவைகளை நிறைவேற்றிட அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
உயர்தர சிகிச்சை
உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது. தமிழ்நாடு, தாய் சேய் நலம் மற்றும் குடும்ப நல சேவைத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி மாநிலமாக திகழ்வதோடு, நோய்களைத் தடுப்பதற்காக பல முன்னோடித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி உயர்தர மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அரசு, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவித்தல், அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், லீனியர் ஆக்ஸிலேட்டர், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், கேத் ஆய்வகங்கள், சி.டி. ஸ்கேன் போன்ற நவீன மருத்துவக் கருவிகளை வழங்குதல், போன்ற அம்மாவுடைய அரசு இன்றைக்கு செயல்படுத்தியிருக்கின்றது.
சிறப்புத் திட்டங்கள்...
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்காக அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்,விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், நடமாடும் மருத்துவமனை திட்டம், தொற்றாநோய் தடுப்பு, கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம், தாய்ப்பால் வங்கி திட்டம், உயர்நிலை மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதி விரிவுபடுத்தல், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, விபத்து சேவை மையங்களுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவுதல், ‘‘108" அவசரகால ஊர்தி சேவை போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அம்மாவினால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பான முறையிலே அம்மாவுடைய அரசு செயல்படுத்தி வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
23,880 பணியாளர்கள்
அரசு மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்குதடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2012-ம் ஆண்டு அம்மாவினால் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வாரியம், இதுவரை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 23,880 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பணி நியமன ஆணை...
242 உதவி மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308 மருந்தாளுநர்கள் மற்றும் 90 நுண்கதிர் வீச்சாளர்கள் மற்றும் 21 வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர்கள், மற்றும் கருணை அடிப்படையில் 10 இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 1008 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிதான் இந்த அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அர்ப்பணிப்பு உணர்வுடன்...
மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில், இன்றைக்கு பணி ஆணை பெற்றுள்ள உதவி மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் நுண்கதிர் வீச்சாளர்கள் தங்களுடைய கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு போதிய மருத்துவ சேவைகளை வழங்குமாறும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு சுகாதார திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்கள் நலம் மேம்படவும், மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.திருக்குறளில் ‘மருந்து’ என்ற அதிகாரம் இருக்கிறது. மருத்துவத் துறைக்கு வருகிறவர்கள் அவசியம் அந்த அதிகாரத்திலுள்ள பத்து குறள்களையும் படித்து, அதன்படி நடப்பதுடன் அந்த கருத்துக்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ராஜாராமன், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின்ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் இன்பசேகரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.