எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது என்று விருதுநகரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவில் முதல்வர் எடப்பாடி மேலும் பேசியதாவது,
பசியை மட்டும் விரட்டினால் போதாது, அவர்கள் சத்தானவர்களாகவும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் காமராஜரின் மதிய உணவு திட்டத்தினை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக மாற்றினார். வெறும் சத்துணவுடன் நில்லாமல், இளைய தலைமுறையினருக்கு அனைத்து வகையான சத்துகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா, தினமும் சூடான கலவை சாதத்துடன் பயறு வகைகள் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் வழங்கி பெருந்தலைவரின் திட்டத்தை மேலும் மெருகேற்றினார். இவ்வாறு பெருந்தலைவர் கொண்டு வந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது. அதை தொடர்ந்து அம்மாவின் அரசு, அனைவருக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில், 2018-19-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், எத்தனையோ துறைகள் தமிழகத்தில் இருந்தாலும், அனைத்துத் துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித் துறைக்கு மிக அதிக அளவு ஒதுக்கீடாக 27ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே இதற்கு சான்றாகும்.
தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு
மிகத் தெளிவான திட்டமிடலின் காரணமாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளும், இந்த வகுப்புகளுக்குரிய பொதுத் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் தேதிகளும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்களுக்கான பல திட்டங்கள் அம்மா வழியில் செயல்படும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு படிப்பிற்கு தேவையான விலையில்லா சீருடை, காலணி இடைநிற்றலை குறைத்திட சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, என அனைத்தும் அம்மா வழியில் செயல்படும் அரசால் தொடர்ந்து மாணவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சாதனை படைத்த அரசு
இந்தத் திட்டங்களுக்காக 2018-19-ம் ஆண்டில் ஆயிரத்து 967 கோடியே 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா வழியில் செயல்படும் அரசால் பொதுத் தேர்வுகளில் அறிவிக்கும் தரமுறை கைவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிம்மதியை அளித்துள்ளது. 2017-18-ம் கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 20 லட்சம் மாணவர்களுக்கு அவர்களுடைய கைபேசி மூலமாக தேர்வு முடிவுகள் வெளியான 2 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு. மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் பெயர் தமிழில் அச்சிட்டு வழங்கும் முறை மார்ச் 2017 பொதுத் தேர்வு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு தமிழக கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களில் ஒரு சிலவற்றை மற்ற மாநிலங்களில் உள்ள கல்வித் துறை, தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகின்றன. கர்ம வீரர் காமராஜர் பள்ளிக்கல்விக்கு எவ்வாறு ஊக்கம் அளித்தார்களோ, அது போல் அம்மாவின் அரசு உயர் கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2011-ம் ஆண்டு அம்மா ஆட்சி பொறுப்பேற்ற போது, உயர்கல்வி படித்திருந்த மாணவர்களின் சதவீதம் 21. இன்றைய தினம் தமிழகத்தில் 46.94 சதவித மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
காமராஜரின் கனவு நிறைவேறியது
பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு அம்மாவினுடைய அரசால் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், அம்மா உயர் கல்விக்கு அளித்த ஊக்கமும், 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியதும் தான். அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு கடந்த ஆண்டு, மேலும் 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடியில் இருக்கின்ற ஏழை மாணவ, மாணவியரும் குறைந்த கட்டணத்தில் கல்வியறிவு பெறுவதற்காக, உயர்கல்வி படிப்பதற்காக, இன்றைக்கு 2011-லிருந்து இன்று வரைக்கும் ஆகமொத்தம் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்த அரசு அம்மாவினுடைய அரசு. 1961-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பொது நூலகச் சட்டத்தை இயற்றி, 454 கிளை நூலகங்களையும், எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட மைய நூலகங்களையும் ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட மக்கள் திட்டங்களால் தான்.
அணைகளை கட்டிய கர்மவீரர்
காமராஜர் ஆட்சி என்னும் சொற்றொடர் இந்திய அரசியல் சொல்லகராதியில் இடம்பெற்றன. விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்க ஆறுகளின் குறுக்கே பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் பல்வேறு அணைகளை கட்டப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம், கீழ்பவானி - நீர்த் தேக்கத் திட்டம், அமராவதி - அணைக்கட்டுத்திட்டம், சாத்தனூர் - நீர்த்தேக்கத் திட்டம், வைகை - அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு - உயர்மட்ட கால்வாய் திட்டம் இப்படி பல அணைகளை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். தற்காலம் அறிவியல் காலம். இதற்கு அடிப்படை தேவை மின்சக்திதான்.
இந்த மின்சக்தியை பெருக்காமல் தொழில் வளர்ச்சிகாண முடியாது என்பதை நன்கு அறிந்து பல மின் திட்டங்களை பெருந்தலைவர் செயல்படுத்தினார். அதே போல், அம்மா 2011-ல் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற போது ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 15 மணி நேரம் மின்தடை இருந்தது. இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று அம்மா சூளுரைத்தார், சொன்னதை நிறைவேற்றினார். அம்மா அவர்கள் வழியில் இன்றும் ஆளுகின்ற நம்முடைய அரசால் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.
காமராஜர்.ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் தொழில் புரட்சி ஏற்பட்டது. அதேபோல் அம்மா முதலீட்டாளார்களை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தினார். அம்மாவின் வழியில் வரும் 2019-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மா அரசால் மீண்டும் நடத்தப்படவுள்ளது.
பெருந்தலைவரின் அத்தனை பண்பு நலன்களையும் கைக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றில் ஒரு சிலவற்றையாவது இன்று அரசியலுக்கு வர விரும்புவோர் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை நமக்கு சுட்டிக் காட்டுகின்ற உண்மையாகும். சென்னையில் உள்ள கர்மவீரர் காமராசர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக 21.6.1978 முதல் தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. இதற்கான உத்தரவினை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறப்பித்தார். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.