முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

சோப்பூர், ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் சர்வதேச எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து விரைந்த பாதுகாப்புப் படையினருடன் எல்லைப் பகுதி அருகிலான பெஹ்ராம்பொரா கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் தெரியாத நிலையில் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணுவ அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் மொபைல் இணைய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோபோர் நகரில் நேற்று கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து