முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்? தம்பிதுரை விளக்கம்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

கரூர் : சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது ஏன்? என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

கோயில் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதால் மத்திய அரசு உதவியுடன் மீட்கவே சி..பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பதில் தவறில்லை. இயந்திரமோ, வாக்குச் சீட்டோ எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் ஏற்றுக்கொள்கிறோம். மத்திய அரசு வாக்குச்சீட்டு முறையை கொண்டு வந்தால் வரவேற்கிறோம் என்றார்.

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிப்பதற்கான ஒப்புதலை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து