எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார்.
168 ரன்கள்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (33 ரன்), கேப்டன் விராட் கோலி (8 ரன்) களத்தில் இருந்தனர்.
3-வது நாள் ஆட்டம்
இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நடந்தது. கோலியும், புஜாராவும் அவசரம் காட்டாமல் பொறுமையாக ஆடினர். ‘ஸ்விங்’ தாக்குலை திறம்பட சமாளித்த இவர்கள், வெளியே சென்ற நிறைய பந்துகளை தொடவே இல்லை. ரன்வேகம் மந்தமாக இருந்தாலும் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது. நிலைத்து நின்று ஆடிய இவர்களை உணவு இடைவேளை வரை இங்கிலாந்து பவுலர்களால் அசைக்க முடியவில்லை.
தாக்குப்பிடிக்கவில்லை
அணியின் ஸ்கோர் 224 ரன்களாக உயர்ந்த போது, புஜாரா (72 ரன், 208 பந்து, 9 பவுண்டரி) பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற குக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே வந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய விராட் கோலி பவுண்டரி அடித்து தனது 23-வது சதத்தை நிறைவு செய்தார். ஆனால் சிறிது நேரத்தில் விராட் கோலி (103 ரன், 197 பந்து, 10 பவுண்டரி) கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக மட்டையை சுழட்டி அரைசதம் கண்டார். இதற்கிடையே ரஹானே 29 ரன்களிலும் (94 பந்து, 3 பவுண்டரி), முகமது ஷமி 3 ரன்னிலும் வெளியேறினர்.
521 ரன்கள் இலக்கு...
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 110 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பாண்ட்யா 52 ரன்களுடன் (52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும். இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.
முக்கிய அம்சங்கள்...
*இங்கிலாந்து மண்ணில், ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சாதனையை விராட் கோலி வசப்படுத்தியுள்ளார். அவர் இந்த தொடரில் இதுவரை 2 சதம், 2 அரைசதம் உள்பட 440 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு தொடரில் இந்திய கேப்டனாக முகமது அசாருதீன் 426 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
*டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் தெண்டுல்கர் (51 சதம்), டிராவிட் (36), கவாஸ்கர் (34) ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ள ஷேவாக்கை (23) கோலி சமன் செய்துள்ளார்.
*முதல் டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து (149 ரன், 51 ரன்) 200 ரன்கள் எடுத்த கோலி, இந்த டெஸ்டிலும் அதே போன்று மொத்தம் 200 ரன்கள் (97 மற்றும் 103 ரன்) எடுத்துள்ளார்.
* முதல் இன்னிங்சில் 97 ரன்களில் ஆட்டம் இழந்த இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இன்னிங்சிலும் 90 ரன்களை கடந்ததும் கொஞ்சம் பதற்றத்திற்குள்ளானார். 93 ரன்னில் இருந்த போது ஆண்டர்சனின் பந்து வீச்சில் கேட்ச் வாய்ப்பை ‘கல்லி’ திசையில் நின்ற ஜென்னிங்ஸ் கோட்டை விட்டார். பந்து எல்லைக்கோட்டிற்கு ஓடியது. அதன் பிறகு மேலும் ஒரு பவுண்டரி அடித்து கோலி சதத்தை எட்டினார். சதம் அடித்ததும் கேலரியில் இருந்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.