முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடனான பேச்சு ரத்து இம்ரான் கான் திமிரான விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,இந்தியா -பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர்களுக்கு இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியாவின் அகங்காரத்தையும், எதிர்மறையான பதிலாகவும் இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது, இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சு என்னுடைய அழைப்பின் பெயரில், வேண்டுகோளின் பெயரில் தொடங்க இருந்த நிலையில், இந்தியாவின் அகங்காரமான, எதிர்மறையான செயல்பாடுகள் என்னை வேதனைப்படுத்துகிறது.எப்படியானாலும், தொலைநோக்குப் பார்வை இல்லாத எதையும் மிகப் பெரிய அளவில் சிந்திக்க இயலாத, அற்ப மனிதர்கள் மிகப் பெரிய பதவிகளில் இருப்பதை நான் என்னுடைய வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கிறேன். அதைக் கடந்துதான் வந்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து