முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாக் -அவுட் பண்ணி லாக்-இன் பண்ணுங்க மக்களுக்கு பேஸ்புக் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க், பேஸ்புக் நிறுவனம் ஒரே நேரத்தில் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்ய சொல்லி உள்ளது.

கடந்த மார்ச் மாத கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்துடன் சேர்ந்து தகவல் திருட்டில் ஈடுபட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இந்த நிலையில் தற்போது பேஸ்புக்கில் பெரிய ஹேக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்தே பேஸ்புக் லாக் அவுட் செய்து லாக் இன் செய்ய கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த வாரம் இறுதியில் பேஸ்புக்கில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 9 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு விவரம் ஹேக் செய்யப்பட்டது. இதை யார் செய்தது என்று தகவல் வெளியாகவில்லை. எந்தெந்த நாடுகளில் இந்த பேஸ்புக் தகவல் திருட்டு நடந்தது என்றும் தகவல் வெளியாகவில்லை.

பேஸ்புக்கில் வியூ அஸ் என்ற வசதி சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியை கொண்டு வந்தது. அதில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக இந்த ஹேக்கிங் பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த வியூ அஸ் வசதியை வைத்துக் கொண்டு  9 கோடி பேரின் பேஸ்புக் விவரங்களை ஹேக்கர்கள் திருடி உள்ளனர். ஆனால் இது எந்த நாடு என்று விவரம் வெளியாகவில்லை. என்ன மாதிரியான தகவல்கள் திருடப்பட்டது என்றும் கூறப்படவில்லை. இதனை தற்போது பேஸ்புக் சரி செய்துள்ளது. ஆனாலும் பாஸ்வேர்டை இதனால் மாற்ற வேண்டும். இதற்காக பேஸ்புக்கை ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு லாக் இன் செய்ய வேண்டும். இதற்காக 220 கோடி பேரிடம் பேஸ்புக்கை லாக் அவுட் செய்து விட்டு லாக் இன் செய்யும்படி பேஸ்புக் கோரிக்கை வைத்து இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து