எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:- அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் பேராசிரியரான இராம.இராமனாதன் அவர்கள் சிறந்த தமிழறிஞருக்கான செட்டிநாட்டரசர் டாக்டர் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது பெற்றமையைப் பாராட்டி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சார்பில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள் வரவேற்புரை நல்கினார், தலைமையுரையாற்றிய துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் அவர்கள் விருதுப் பெற்ற பேராசிரியர் இராம.இராமனாதனின் தமிழ்ப்பணி மற்றும் சிலப்பதிகாரப் பணி ஆகியவற்றைப் பாராட்டி ஒவ்வொரு மாதமும் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிலப்பதிகாரம் பற்றிய சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பேராசிரியர் இராம.இராமனாதன் அவர்களும் தமது ஏற்புரையில் சொற்பொழிவு ஆற்ற தமது இசைவைத் தெரிவித்தார். இப்பாராட்டு விழாவிற்கு நகரச் சான்றோர்கள் திரு.பெரியண்ணன், திரு.சக்தி திருநாவுக்கரசு, காரைக்குடி சுழற்சங்க ஆளுனர் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முனைவர் பட்ட ஆய்வாளர் கா.சுபா அவர்கள் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


