எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,தான் பிறந்த சொந்த மாவட்டத்தின் வளங்களையும், இந்திய தேசத்தின் சொத்துக்களையும் சூறையாடியவர், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் பற்றி ஆப்பிள், பேரிக்காய் என்று அரைவேக்காட்டுத்தனமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ஆர். பாலு என்று தங்கமணி காட்டமாக தாக்கியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மின்துறை அமைச்சருமான தங்கமணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
சொந்த கட்சித் தொண்டர்களுக்கே ரத்தக் கண்ணீர் வரக்கூடிய வகையில் சுயநல அரசியல் செய்பவர் என்று 2012-ம் ஆண்டே தனது தலைவரால் சபிக்கப்பட்ட டி.ஆர்.பாலு கனிகளுக்கிடையே வேறுபாடுகளைக் கண்டறியும் வித்தையை கரைத்துக் குடித்தவர் போலிருக்கிறதே ! என்று நினைக்கத் தோன்றும் வகையில் ஆப்பிள், பேரிக்காய் என்றெல்லாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அரைவேக்காட்டு அறிக்கையை...ஊழல் மகா சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுத்த டி.ஆர்,. பாலு, மக்களை “ஞான சூனியமாக்கும்” முயற்சியில் இறங்கி, தேசிய-மாநில நெடுஞ்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பணி என்றும், சாலைப் பணிகளை செயல்படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்வது எல்லாம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி என்றும்” தனது அறிக்கையில் கூறியிருக்கும் டி.ஆர்.பாலுவுக்கு, மாநில நெடுஞ்சாலைப் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் தெரியாமல் போனதால் ஆப்பிள், பேரிக்காய் என்று அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விளக்க வேண்டிய சூழ்நிலை...குழப்பத்தில் இருக்கும் டி.ஆர்.பாலு, தெளிவு பெறுவதற்காக மாநில நெடுஞ்சாலைப் பணிகளைப் பற்றி விளக்க வேண்டி இருக்கிறது. தமிழ் நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பணி மேற்கொள்ளப்படுவதை நடைமுறைப்படுத்த, மூத்த அதிகாரிகளைக் கொண்ட மதிப்பீட்டுக்குழு, நிலைக்குழு ஆகிய இரண்டு கமிட்டிகள் உள்ளன. அவை, நிதித் துறை துணைச் செயலரும், திட்ட இயக்குநரும், உறுப்பினர்களாக உள்ள மதிப்பீட்டு குழு முதலில் தொழிற்நுட்பத்தை அம்சங்களை சரிபார்க்கிறது. அதன் பிறகு நிதி குறித்த அம்சங்கள் சரிபார்க்கப்படுகிறது. பின்னர் மதிப்பீட்டுக்குழுவில் இருந்து ஒப்பந்தங்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன.
ஒப்பந்ததாரருக்கு டெண்டர்...நிதித் துறை செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர், திட்ட இயக்குநர், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் முதன்மைப் பொறியாளர் ஆகியோர் கொண்ட மதிப்பீட்டுக்குழு ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் ஒப்பந்தத்தின் விவரங்களை ஆய்வு செய்து, அது சரியாக இருப்பின், உலக வங்கியின் பரிசீலனைக்கு அனுப்புகிறது. உலக வங்கி அந்த ஆவணங்களை சரிபார்த்து, ஏற்புடையதாக இருந்தால், அந்த ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. இது, தி.மு.க. ஆட்சி நடைபெற்ற நேரத்திலும் நடைமுறையில் இருந்தது. இப்போதும் நடைமுறையில் உள்ளது.
முதல்வருக்கு தொடர்பு கிடையாது...தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒப்பந்த விண்ணப்பங்களை பெட்டியில் போடும் திட்டம், நடைமுறையில் இருந்தது. தற்பொழுது, அரசில், டெண்டர் முறையில் எந்தவித ஊழல் முறைகேட்டுக்கும் வழியில்லாத வகையில் டெண்டர் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ் நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையிலும், மூத்த அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இரண்டு குழுக்கள்தான் டெண்டர்களை முடிவு செய்கின்றனவே தவிர, இதில் துறையின் அமைச்சருக்கும், தற்போது துறையின் அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. டெண்டர் தொடர்புடைய கோப்புகள், துறையின் அமைச்சருக்கு வராத போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எப்படி கூறமுடியும்?
தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்று முதல்வர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சொல்கிறாரே! என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் டி.ஆர் . பாலு. அது குறித்த கேள்வியை பாலுவுக்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முடிச்சு போடுவது ஏன்?முதலமைச்சர் மீது ஊழல் கண்காணிப்புத் துறையிடம் புகார் கொடுத்த பின், தி.மு.க-வின் ஆர்.எஸ். பாரதி, ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசி வழித்தடத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ. 2.20 கோடிதான் செலவாகும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்படியானால் 12 ஆண்டுகளுக்கு முன், 2006-ம் ஆண்டு,டி.ஆர். பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, சேலம் - குமாரபாளையம் நான்கு வழிச் சாலை, ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு ரூ. 8.78 கோடி செலவாகியது எப்படி ? மற்றும் குமாரபாளையம் - செங்கப்பள்ளி சாலை அமைக்க 1 கி.மீ.க்கு ரூ.7.83 கோடி செலவாகியது எப்படி? என்று தான் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு டி.ஆர். பாலு நேரடியாக பதில் அளிக்காமல் ஆப்பிளுக்கும், பேரிக்காய்க்கும் முடிச்சு போடுவது ஏன்? இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.