முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் போராட்டம் நடத்திய 150 பேர் கைது கேரள அரசு நடவடிக்கை

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்திய புகாரில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் மொத்தம் 59 வழக்குகள் பதிவாகியுள்ளன.

போர்க்களமான சபரிமலை....சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கேரளாவில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் இறுதி வரை போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பி விடப்பட்டனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களே பம்பை, நிலக்கல், சபரிமலையில் போர்க்களம் போல் காட்சியளித்தது.

150 பேர் கைது.....இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீசார்ர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை கோவிலில் நடந்த மோதல் தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து